நீர்ப் பந்தாட்டம்

நீர்ப் பந்தாட்டம் அல்லது புனல்பந்தாட்டம் நீரில் விளையாடப்படும் ஓர் அணி விளையாட்டாகும். விளையாட்டணியில் ஆறு பேர் களத்திலும் ஒருவர் கோல் பாதுகாவலராகவும் விளையாடுவர். இந்த விளையாட்டில் நீந்தியவாறே வீரர்கள் பந்தை வீசும்போது எதிரணியினர் தடுப்பார்கள். எதிரணியின் வலைக்கூண்டினுள் அதன் பாதுகாவலரையும் மீறி பந்தை இடுவது ஒரு பேறாகக் கருதப்படும். எந்த அணி கூடுதல் பேறுகளைப் போட்டதோ அந்த அணி வென்றதாக அறிவிக்கப்படும். இது நிலத்தில் ஆடப்படும் எறிபந்தாட்டம் போன்றுள்ளது. சில ஆட்டவிதிகள் பனி வளைதடியாட்டம் போன்றுள்ளது.

நீர்ப் பந்தாட்டம்
கிரீஸ் மற்றும் ஹங்கேரி இடையேயான போட்டி, நேப்பிள்ஸ், இத்தாலி
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்புபன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு (எவ். ஐ. என். ஏ.)
பிற பெயர்கள்போலோ
முதலில் விளையாடியது1870
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
தொடர்புஆம்
அணி உறுப்பினர்கள்ஓரணிக்கு 7 பேர்
(6 களத்தில், 1 கோல் பாதுகாப்பு)
இருபாலரும்இல்லை
பகுப்பு/வகைநீர் விளையாட்டுக்கள்
கருவிகள்நீர்ப் பந்தாட்டப் பந்து, நீர்ப்பந்தாட்டத் தொப்பி, நீச்சலுடை
தற்போதைய நிலை
ஒலிம்பிக்ஆண்களுக்கு 1900-நடப்பு
மகளிர் 2000-நடப்பு

மேலும் படிக்க தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நீர் போலோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்ப்_பந்தாட்டம்&oldid=3758577" இலிருந்து மீள்விக்கப்பட்டது