நோயியல் (Pathology) என்பது நோய் அல்லது காயத்தின் காரணங்கள் மற்றும் விளைவுகளை பற்றிய ஆய்வுப்பிரிவு ஆகும். நோயியல் என்ற சொல் பொதுவாக நோய் பற்றிய படிப்பையும் குறிக்கிறது, இப்பிரிவு பல்வேறு வகையான உயிரியல் ஆராய்ச்சி துறைகள் மற்றும் மருத்துவச் சிகிச்சை நடைமுறைகளை உள்ளடக்கியுள்ளது. இருப்பினும், நவீன மருத்துவ சிகிச்சையின் அடிப்படையில் இச்சொல் பயன்படுத்தப்படும்போது, பொது நோயியலின் சமகால மருத்துவத் துறையில் வரும் செயல்முறைகள் மற்றும் சோதனைகளைக் குறிக்க இந்த சொல் மிகச்சரியாகவும் பயன்படுத்தப்படுகிறது, இது சோதனை உள்ளிட்ட ஒன்றுடன் ஒன்று இடைதொடர்புடைய பல தனித்துவமான செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. பெரும்பாலும் திசு, செல் மற்றும் உடல் திரவ மாதிரிகள் பகுப்பாய்வு போன்றவை இச்செயல்பாடுகளில் அடங்கும். மொழியியல் ரீதியாக நோயியல்" என்பது குறிப்பிட்ட நோய்களின் கணிக்கப்பட்ட அல்லது உண்மையான நோய் வளர்ச்சி அடைதலை குறிக்கலாம். (அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு புற்றுநோயின் பல்வேறு வடிவங்களில் மாறுபட்ட நோயியல் பண்புகள் உள்ளன) நோயியலின் இணைப்புப் பாதை சில நேரங்களில் இதயத் தசைநோய் போன்ற ஓர் உடல் நோயின் நிலையையும் உளவியல் மருத்துவம் போன்ற உள்ள நிலைமைகள் தொடர்பானவற்றையும் குறிக்கப் பயன்படுகிறது[1]. நோயியலைப் பயிற்றுவிக்கும் ஒரு மருத்துவர் ஒரு நோயியல் நிபுணர் என்று அழைக்கப்படுகிறார்.

நோயியல்

பொது விசாரணை மற்றும் ஆராய்ச்சித் துறையாக, கருதப்படும் நோயியல் பிரிவு நோயின் நான்கு கூறுகளைக் குறிக்கிறது: நோய்க்கான காரணம், நோய்க்கிருமி உருவாகி வளர்ச்சியடையும் ன் வழிமுறைகள், உயிரணுக்களின் கட்டமைப்பில் ஏற்படும் உருவ மாற்றங்கள், அம்மாற்றங்களின் விளைவுகள் போன்றவை அந்த நான்கு நோயியல் கூறுகளாகும் [2]. பொதுவான மருத்துவ நடைமுறையில், தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்களுக்கான குறிப்பான்கள் அல்லது முன்னோடிகளாக அறியப்பட்ட மருத்துவ அசாதாரணங்களை பகுப்பாய்வு செய்வதில் பொது நோயியல் பெரும்பாலும் அக்கறை கொண்டுள்ளது மற்றும் உடற்கூறு நோயியல் மற்றும் மருத்துவ நோயியல் ஆகிய இரண்டும் முக்கியமாக சிறப்பான துறை நிபுணர்களால் மேற்கொள்ளப்படுகிறது. சம்பந்தப்பட்ட நோய் வகைகளின் அடிப்படையிலும் (எடுத்துக்காட்டாக, செல் நோய் கூறியல், இரத்த நோயியல், திசு நோயியல் போன்றவற்றையும் நோயியல் குறிக்கிறது. மேலும் சிறுநீரக நோயியல் போன்ற உடல் உறுப்புகள் தொடர்பானவற்றையும் மற்றும் வய் நோயியல் போன்ற உடலியல் அமைப்புகள் தொடர்பானவற்றையும் தடயவியல் நோயியல் போன்ற சிறப்பு சோதனை அம்சங்களையும் நோயியல் உள்ளடக்கியுள்ளது.

நோயறிதல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி போன்ற பிரிவுகள் நவீன மருத்துவத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க துறைகளாகும்.

வரலாறு தொகு

 
நுண்ணோக்கியின் வருகை நோயியல் வரலாற்றில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். இங்கே ஆராய்ச்சியாளர்கள் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் 1978 ல் லெகியோனெல்லா நிமோபியா , நோய்க்கிருமி ஆய்வில்

உடலின் விரிவான நோய்ப் பரிசோதனை, குறிப்பிட்ட நோய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் நோய் விசாரணை உள்ளிட்ட நோயியல் ஆய்வுகள், பழங்காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. பல நிபந்தனைகளின் அடிப்படை புரிதல் பெரும்பாலான ஆரம்பகால சமூகங்களில் இருந்தது. மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ஆரம்பகால வரலாற்று சமூகங்களின் இதற்கான பதிவுகளும் சான்றளிக்கின்றனref name="Long1965">Long, Esmond (1965). History of Pathology. New York: Dover. பக். 1+. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-486-61342-0. https://archive.org/details/historyofpatholo0000long. </ref>. பண்டைய கிரேக்கத்தின் எலெனிய காலகட்டத்தில், நோயைப் பற்றிய ஒரு ஒருங்கிணைந்த காரண ஆய்வு நடந்து கொண்டிருந்தது. . பல குறிப்பிடத்தக்க ஆரம்பகால இப்போகிரட்டீசு போன்ற மருத்துவர்கள், நோயறிதல் மற்றும் முன்கணிப்பு முறைகளை உருவாக்கியுள்ளனர் பல நோய்களுக்கு. ரோமானியர்கள் மற்றும் பைசாண்டின்களின் மருத்துவ நடைமுறைகள் இந்த கிரேக்க வேர்களிலிருந்து தொடர்ந்தன, ஆனால், விஞ்ஞான விசாரணையின் பல பகுதிகளைப் போலவே, மருத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கான வளர்ச்சியும் பாரம்பரிய சகாப்தத்திற்குப் பிறகு சிறிது தேக்கமடைந்தது, ஆனால் தொடர்ந்து பல கலாச்சாரங்களில் மெதுவாக வளர்ச்சி தொடர்ந்தது. குறிப்பிடத்தக்க வகையில், இசுலாத்தின் இடைக்கால சகாப்தத்தில் பல முன்னேற்றங்கள் காணப்பட்டன. இந்த காலத்தில் கிரேக்க பாரம்பரியத்தின் அடிப்படையில் ஏராளமான சிக்கலான நோயியல் நூல்கள் உருவாக்கப்பட்டன[3]. அப்படியிருந்தும், அறிவாற்றல் மற்றும் பரிசோதனைகளின் மறுமலர்ச்சி, அறிவொளி மற்றும் பரோக் காலங்களில் மீண்டும் பெருகத் தொடங்கும் வரை, நோயைப் பற்றிய சிக்கலான புரிதலின் வளர்ச்சி பெரும்பாலும் நலிந்தே இருந்தது. புதிய புலமைப்பரிசில் மையங்களில் அனுபவ முறை மீண்டும் எழுந்ததைத் தொடர்ந்து. 17 ஆம் நூற்றாண்டில், நுண்ணோக்கி பற்றிய ஆய்வு நடந்து கொண்டிருந்தது மற்றும் திசுக்களின் ஆய்வு பிரித்தானிய இராயல் கழக உறுப்பினர் ராபர்ட் ஊக்கை " செல் " என்ற சொல்லை உருவாக்க வழிவகுத்தது, இது பிற்கால கிருமிக் கோட்பாட்டிற்கான களத்தை தொடங்கி வைத்தது.

நவீன நோயியல் 19 ஆம் நூற்றாண்டில் இயற்கையான தத்துவவாதிகள் மற்றும் மருத்துவர்கள் மூலமாக வளர்ச்சி பெற்றது. நோயை அணுபவத்தின் மூலம் படித்து அவர்கள் “நோயியல் உடற்கூறியல்” அல்லது “நோயுற்ற உடற்கூறியல்” என்று பெயரிட்டு அழைத்தனர். முறைசாரா ஆய்வுகள் மூலம் ஒரு தனித்துவமான விசாரணைத் துறையாக நோயியல் உருவாக்கத் தொடங்கியது. இருப்பினும், நுண்ணுயிரியல் பற்றிய விரிவான ஆய்வின் வருகை நிகழும் வரை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நோயியல் ஒரு சிறப்புப் பகுதியாக முழுமையாக உருவாக்கப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டில், நோயை உருவாக்கும் நோய்க்கிருமிகள் அல்லது கிருமிகள் பற்றி புரிந்து கொள்ளத் தொடங்கினர். நோயை உண்டாக்கும், நோய்க்கிருமிகளான பாக்டீரியாக்கள், வைரசுகள், பூஞ்சைகள், அமீபா, அச்சுகள், புரோட்டீசுட்டுகள் போன்றவை அறியப்பட்டன. இவை. இனப்பெருக்கம் மற்றும் பெருகும் திறன் கொண்டவை என்பது உணரப்பட்டது. முந்தைய 1,500 ஆண்டுகளாக ஐரோப்பிய மருத்துவத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆன்மீக முகவர்களின் முந்தைய நம்பிக்கைகளை மாற்றியமைத்தன. நோய்க்கிருமிகளைப் பற்றிய புதிய புரிதலுடன், மருத்துவர்கள் ஒரு கிருமியின் அறிகுறிகள் மற்றும் பண்புகள் பாதிக்கப்பட்ட நபருக்குள் வளர்ந்ததை மற்றொரு கிருமியின் பண்புகள் மற்றும் அறிகுறிகளுடன் படிப்படியாக ஒப்பிட்டு பார்க்கத் தொடங்கினர். இந்த உணர்தல் மூலம் நோய்கள் தங்களை பிரதிபலிக்க முடிகிறது, மேலும் அவை மனித உடலில் பல ஆழமான மற்றும் மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அடிப்படை புரிதல் தோன்ற இது வழிவகுத்தது. நோய்களுக்கான காரணங்களைத் தீர்மானிக்க, மருத்துவ வல்லுநர்கள் தங்கள் காலத்தின் மிகவும் பொதுவான மற்றும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அனுமானங்களை அல்லது அறிகுறிகளைப் பயன்படுத்தினர், இதுவே நவீன மருத்துவத்திலும் தொடரும் அணுகுமுறையாகும்[4][5].

திசுக்களை பகுப்பாய்வு செய்வதற்கான நுண்ணோக்கியின் மேலும் முன்னேற்றங்களால் நவீன மருத்துவம் குறிப்பாக முன்னேறியது, இதற்கு ருடால்ப் விர்ச்சோ ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார், இது ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது. 1920 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து 1930 ஆம் ஆண்டுகளின் முற்பகுதி வரை நோயியல் ஒரு சிறப்பு மருத்துவப் பிரிவு என்று கருதப்பட்டது. பொது உடலியல் பற்றிய புரிதலின் வளர்ச்சியுடன் இணைந்து, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நோயியல் பற்றிய ஆய்வு பல அரிதான துறைகளாகப் பிரியத் தொடங்கியது, இதன் விளைவாக நோயியலுக்குள் ஏராளமான நவீன சிறப்புகள் மற்றும் நோயறிதலுக்கான தொடர்புடைய துறைகள்பல உருவாகின.

பெயர்க்காரணம் தொகு

அடிப்படையில் பாதிக்கப்படும் அனுபவம் என்ற பொருள் கொண்ட நோயியல் என்ற சொல் பண்டைய கிரேக்கத்திலிருந்து வருகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Definition of -path in English". Oxford English Dictionary. OED. Archived from the original on 17 October 2013. பார்க்கப்பட்ட நாள் 12 October 2013.
  2. Robbins, Stanley (2010). Robbins and Cotran pathologic basis of disease (8th ). Philadelphia: Saunders/Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4160-3121-5. 
  3. "Commentary on the Chapter Nine of the Book of Medicine Dedicated to Mansur — Commentaria in nonum librum Rasis ad regem Almansorem". World Digital Library (in Latin). 1542. Archived from the original on 2014-02-14. பார்க்கப்பட்ட நாள் 2014-03-02.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. King, Lester (1991). Transformations in American Medicine: From Benjamin Rush to William Osler. Baltimore: Johns Hopkins UP. பக். 27+. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-4057-9. https://archive.org/details/transformationsi0000king. 
  5. Machevsky, Alberto; Wick, MR (2004). "Evidence-based Medicine, Medical Decision Analysis, and Pathology". Human Pathology 35 (10): 1179–88. doi:10.1016/j.humpath.2004.06.004. பப்மெட்:15492984. https://archive.org/details/sim_human-pathology_2004-10_35_10/page/1179. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோயியல்&oldid=3871441" இலிருந்து மீள்விக்கப்பட்டது