பன்னாட்டுத் தீயணைக்கும் படையினர் நாள்

பன்னாட்டுத் தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters' Day) மே 4ஆம் நாளன்று ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது.[1]

சிவப்பு-நீல நாடா சின்னம் (IFFD)

பின்னணி தொகு

வழக்கமாக இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. எனினும் 1999 ஆண்டு ஜனவரி 4 அன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவுகூருவதற்கு ஆதரவாக உலகெங்கும் மின்னஞ்சல் மூலமாக இடம்பெற்ற பரப்புரையினை அடுத்து மே 4ஆம் நாளை உலகெங்கும் நினைவுகூர முடிவுசெய்யப்பட்டது.[2]

மேற்கொள்கள் தொகு

  1. "International Firefighters' Day". Archived from the original on 2020-08-08. பார்க்கப்பட்ட நாள் 2017-02-01.
  2. அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்

வெளி இணைப்புகள் தொகு