பரிதி இளம்வழுதி

தமிழக அரசியல்வாதி

பரிதி இளம்வழுதி (11 நவம்பர் 1959 - 13 அக்டோபர் 2018) என்பவர் இந்திய அரசியல்வாதியாவார். திராவிட இயக்கக்கொள்கையில் பற்றுக்கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த இளம்வழுதி என்பவருக்கு மகன் [1]; சிறந்த பேச்சாளர்; சட்டமன்ற உறுப்பினர்; இதழாளர்.

பரிதி இளம்ழுதி
தமிழக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–2011
தொகுதிஎழும்பூர்
பதவியில்
1984–1989
தொகுதிபெரம்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1959-11-11)நவம்பர் 11, 1959
சென்னை
இறப்புஅக்டோபர் 13, 2018(2018-10-13) (அகவை 58)
சென்னை
அரசியல் கட்சிஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்எஸ் எம் லலிதா
பிள்ளைகள்இந்திரசித் இளம்வழுதி
முன்னாள் கல்லூரிஉவெசுலி உயர்நிலைப்பள்ளி, இராயப்பேட்டை, சென்னை-600014
வேலைஅரசியல்வாதி

இளமைக்காலம் தொகு

பரிதி தனது பள்ளி இறுதியை சென்னை இராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். 

சட்டமன்ற உறுப்பினர் தொகு

இவர்  தமிழக சட்டமன்றத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு 28 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் தனது 25வது வயதில் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு. க.வின் சத்தியவாணி முத்துவை எதிர்த்துப் போட்டியிட்டு பெரம்பூரில் வெற்றிபெற்றார். எழும்பூர் தொகுதியில் 1989 முதல் 2011வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய 1991-1996 காலகட்டத்தில் சட்டமன்றத்தில் ஒரே ஒரு திமுக உறுப்பினராக இவர் செயல்பட்டவிதத்தைக் கண்டு தி.மு.க தலைவர் மு. கருணாநிதியால் இந்திரஜித், வீர அபிமன்யு ஆகியோருடன் ஒப்பிடப்பட்டு புகழப்பட்டார்.

பேரவைத் துணைத்தலைவர் தொகு

இவர் 11வது சட்டமன்றத்தின் (1996-2001 ) காலகட்டத்தில் பேரவைத் துணைத் தலைவராக இருந்தார்.

அமைச்சர் தொகு

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக 2006-2011 காலகட்டத்தில் இருந்தார்.

தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் தொகு

இவர் தி.மு.க வில் துணைப் பொதுச்செயலாளராகவும் பதவியில் இருந்தார்.

அ.தி.மு.க.வில் தொகு

தி.மு.கவில் ஏற்பட்ட கசப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.கவில் 28/06/13 அன்று இணைந்தார். அடுத்த நாளே அ.தி.மு.கவின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[2] [3] ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த பிறகு, ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.[4] பின்னர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். [5]அதனால் டி.டி.வி.அணியில் இணைந்தார். [6]

இதழாளர் தொகு

இவர் அறிவுக்கொடி என்னும் இதழைச் சிறிதுகாலம் ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.

மரணம் தொகு

உடல்நலக்குறைவால் சென்னை அடையாற்றில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2018 அக்டோபர் 13ஆம் நாள் அதிகாலை மரணமடைந்தார். [7]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிதி_இளம்வழுதி&oldid=2692693" இலிருந்து மீள்விக்கப்பட்டது