பளை

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

பளை (Pallai) என்பது இலங்கையின் வடக்கே, கிளிநொச்சி மாவட்டத்தில், வடக்கு மூவலந்தீவின் கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம்.[1] பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இந்நகரம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிருவாகத்தில் இயங்குகிறது. இங்கு தமிழர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

பளை

பளை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - கிளிநொச்சி
அமைவிடம் 9°36′00″N 80°19′00″E / 9.6°N 80.316667°E / 9.6; 80.316667
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

போக்குவரத்து தொகு

பளை தொடருந்து நிலையம் ஊடாகச் செல்லும் வடக்குத் தொடருந்துப் பாதை இலங்கையின் தெற்குப் பகுதியையும், வடக்கையும் இணைக்கிறது. தற்போது (2014 மார்ச்) கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் பளை வரை மட்டுமே செல்கிறது.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பளை&oldid=3220057" இலிருந்து மீள்விக்கப்பட்டது