பாபநாசம் அணை

பாபநாசம் அணை, தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது. இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு முக்கிய அணையாகும். இந்த அணையில் 143 அடிவரை நீரைத் தேக்க இயலும். அணையின் கொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடி. பாபநாசம் மலையில் ஆங்கிலேயர் காலத்தில் 1942 இல் இந்த அணை கட்டப்பட்டது. இவ்வணையிலிருந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆறு பாய்கிறது. இதன் மூலம் இவ்விரு மாவட்டங்களும் பாசன வசதி பெறுகின்றன[1]. மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் விருதுநகர் ,தென்காசி மாவட்டங்களின் ஆண்டு முழுவதுக்குமான குடிநீர் தேவையை அணை தருகிறது.

பாபநாசம் அணை
பாபநாசம் அணை is located in தமிழ் நாடு
பாபநாசம் அணை
தமிழ்நாட்டில் பாபநாசம் அணையின் அமைவிடம்
நாடுஇந்தியா
அமைவிடம்பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
திறந்தது1942
அணையும் வழிகாலும்
உயரம்143 அடி (44 m)
உயரம் (அடித்தளம்)200 அடி (61 m)
நீளம்744 அடி (227 m)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்பாபநாசம் நீர்தேக்கம்
மொத்தம் கொள் அளவு5.5×10^9 cu ft (126,263 acre⋅ft)
மின் நிலையம்
இயக்குனர்(கள்)தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
பணியமர்த்தம்அலகு 1: ஜூலை 8, 1944
அலகு 2: டிசம்பர் 12, 1944
அலகு 3: ஜூன் 10, 1945
அலகு 4: ஜூலை 7, 1951
வகைஎடையீர்ப்பு அணை
சுழலிகள்4 x 8 MW பிரான்சிசு-வகை
நிறுவப்பட்ட திறன்32 MW

புனல்மின் உற்பத்தி நிலையம் தொகு

பாபநாசம் அணையில் புனல் மின் நிலையம் செயல்பட்டுவருகிறது. இது 28 மெகாவாட் திறன் கொண்டது. இதில் நான்கு ஃபிரான்சிஸ் விசையாழி-மின்னாக்கிகள் உள்ளன. முதல் அலகு 1944 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் இயக்கப்படுகிறது.[2][3]

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Papanasam Dam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-03. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
  2. http://www.tangedco.gov.in/hydrokoday.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-02. பார்க்கப்பட்ட நாள் 2016-08-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபநாசம்_அணை&oldid=3760808" இலிருந்து மீள்விக்கப்பட்டது