பாலகிருஷ்ணா (கன்னட நடிகர்)

இந்திய நடிகர்

டி.என்.பாலகிருஷ்ணா (Balakrishna ) (2 நவம்பர் 1911 – 19 சூலை 1995) கன்னட திரையுலகில் ஒரு இந்திய நடிகராவார். இவருக்கு செவிப்புலன் பிரச்சினை இருப்பதாகவும், இவர் முற்றிலும் காது கேளாதவர் என்றும் சிலர் கூறுகின்றனர். இருப்பினும், இவர் கலைஞர்களின் உதடு அசைவுகளை உணர்வார். உரையாடல்களை தன்னிச்சையாக விவரிப்பார். முரியதா மனே (1964), பங்காரதா மனுஷ்யா (1972), காந்தத குடி (1973) மற்றும் காமனா பில்லு (1983) போன்ற படங்களில் நகைச்சுவை மற்றும் வில்லத்தனமான பாத்திரங்களுக்காக பிரபலமான இவர், ராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவருடன் தோன்றினார்.

டி. என். பாலகிருஷ்ணா
பிறப்பு(1911-11-02)2 நவம்பர் 1911
அரசிகெரே, ஹாசன்
மைசூர் அரசு
இறப்பு19 சூலை 1995(1995-07-19) (அகவை 83)[1]
பெங்களூர், கருநாடகம், இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்பாலண்ணா
பணிநடிகர்
வாழ்க்கைத்
துணை
சத்யவதி
சரோஜாம்மா
பிள்ளைகள்5

பாலகிருஷ்ணா , 560 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகன், வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்ர வேடம், அன்பான தந்தை மற்றும் பைத்தியக்காரராகத் தோன்றி கன்னட சினிமாவில் அதிக வேடங்களில் நடித்துள்ளார் என்று அறியப்படுகிறது. சுதா சந்திரன் இவரது முன்னாள் மருமகள் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர், 2 நவம்பர் 1911 அன்று மைசூர் அரசின் அரசிகெரே என்ற ஊரில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு நான்கு வயதாக இருந்தபோது, இவரது தாயார் அவரை ஒரு தம்பதியினருக்கு வெறும் 8 க்கு விற்றார். அங்கு மோசமாக நடத்தப்பட்ட பின்னர் இவர் வளர்ப்பு பெற்றோரிடமிருந்து ஓடிவிட்டார்.

தொழில் தொகு

இவர், முதன்முதலில் ஸ்ரீ ராம பட்டாபிசேகம் என்ற நாடகத்தில் 1929 இல் நடித்தார். இதைத் தொடர்ந்து, இவர் ஒரு தொழில்முறை அடையாள ஓவியராக மாறுவதற்கு முன்பு ஒரு நாடக நிறுவனத்திற்கு மேடை பின்னணியின் ஓவியராக பணியாற்றினார். பின்னர், மிகக் குறைந்த சம்பளத்திற்கு ஒரு நாடக நிறுவனத்தில் நுழைவுச்சீட்டு சேகரிப்பாளராக ஆனார். இவர் லட்சுமாசன நாடக நிறுவனத்துடனும் பின்னர் கௌரிசங்கர் நடக மண்டலியுடனும் நாடகங்களில் நடித்து திரும்பினார். இதைத் தொடர்ந்து, அந்தக் காலத்தில் குறிப்பிடத்தக்க நாடக இயக்குநரான குப்பி வீரண்ணாவின் நாடக நிறுவனத்தில் சேர்ந்தார்.[2] திரைப்பட இயக்குனர் பி.ஆர்.பந்துலு நாடக நிறுவனத்தை பார்வையிட்டார். மேடையில் இவரது நடிப்பைக் கண்டு, இவருக்கு ஒரு திரைப்பட பாத்திரத்தை வழங்கினார்.இவ்வாறு திரைப்பட நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், காலச்சக்ரா என்ற படத்தில் ஒரு வில்லனாகத் தோன்றினார். இது பாராட்டப்பட்ட ஒரு நடிப்பாக இருந்தது. ராஜ்குமார் முக்கிய வேடங்களில் நடித்த நூற்றுக்கும் மேற்பட்ட கன்னட படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் இவர் நடித்துள்ளார்.

கன்னட திரையுலகத்தை தன்னம்பிக்கை கொள்ளவும், தயாரிப்பாளர்களுக்கு பணத்தை மிச்சப்படுத்தவும், படப்பிடிப்பு அரங்கம் ஒன்றைத் தொடங்கினார். தனது பணம் மற்றும் சொத்து அனைத்தையும் இதில் முதலீடு செய்தார். இவர் 1963 ஆம் ஆண்டில் பெங்களூரின் கெங்கேரியில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் அபிமான் என்ற படப்பிடிப்பு அரங்கத்தைக் கட்டினார், ஆனால் ஆரம்பத்தில் சிரமங்களை எதிர்கொண்டார்.

கன்னட படங்கள் எதுவும் தயாரிக்கப்படாதபோது, ராஜ்குமார், ஜி.வி.ஐயர் போன்ற பிற நடிகர்களுடன் சேர்ந்து ரணதீரா காந்தீரவா என்ற படத்தை தயாரித்தார். இவர் படப்பிடிப்பு அரங்கத்தை உருவாக்க ஒரு நபருக்கு 1 என்ற அளவில் பொதுமக்களிடமிருந்து பணத்தை திரட்டினார். அரங்கம் ஒரு தோல்வியாக முடிந்தது. மேலும் இவர் இறந்து போனார். பாலகிருஷ்ணாவின் மகன் பி.கணேஷ் மற்றும் பேரன் கார்த்திக் ஆகியோரால் கவனிக்கப்பட்டு வரும் படப்பிடிப்பு அரங்கத்தில் இன்றும் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் படமாக்கப்படுகின்றன.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "His last days of "AU REVOIR"". Archived from the original on 2013-01-17. பார்க்கப்பட்ட நாள் 2020-10-18.
  2. Ashish Rajadhyaksha; Paul Willemen (10 July 2014). Encyclopedia of Indian Cinema. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-135-94325-7. https://books.google.com/books?id=rF8ABAAAQBAJ&pg=RA14-PA1985. 
  3. "No Abhiman about Balanna". Bangalore Mirror. Archived from the original on 14 January 2012.

வெளி இணைப்புகள் தொகு

External links தொகு