பால்கு ஆறு
பால்கு ஆறு அல்லது பல்கு ஆறு அல்லது பல்குனி ஆறு, இந்தியாவின் பிகார் மாநில நகரமான கயையில் பாயும் புனித ஆறு ஆகும். [1]இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் பால்கு ஆற்றை புனிதமாகக் கருதுகின்றனர். பண்டைய காலத்தில் பால்கு ஆற்றை, சமசுகிருத மொழியில் நிரஞ்சனா ஆறு என அழைக்கப்பட்டது. பால்கு ஆற்றின் கரையில் கயை நகரம் மற்றும் விஷ்ணுபாதம் கோயில் உள்ளது.
பல்கு ஆறு | |
River | |
கயையில் பாயும் பால்கு ஆறு
| |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலம் | பிகார் |
நகரம் | கயை |
உற்பத்தியாகும் இடம் | லீலாஜன் ஆறும், மோகனா ஆறும் கலந்து பால்கு ஆறாக பாய்கிறது. |
- அமைவிடம் | கயை அருகில் |
கழிமுகம் | புன்புன் ஆறு |
லீலாஜன் ஆறும், மோகனா ஆறும் புத்தகயாவில் ஒன்று கூடி பால்கு ஆறாக கயையில் பாய்கிறது. [2]பால்கு ஆற்றை நிரஞ்சனா ஆறு என்றும் அழைப்பர்.[3]
மழைக் காலங்களில் மட்டும் பால்கு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். பிற பருவ காலங்களில் பால்கு ஆறு நீரின்றி வற்றி இருக்கும்.[2]
சமயச் சிறப்பு தொகு
இந்து சமயத்தினர், பால்கு ஆற்றாங்கரையில் பிண்ட தானம், தர்ப்பணம் போன்ற நீத்தார் வழிபாடு செய்வது சிறப்பாக கருதுகின்றனர். [2][4]
இதனையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ The Falgu river
- ↑ 2.0 2.1 2.2 "Bengal District Gazaetter - Gaya By L.S.S. O'malley". pp. 8-9. Google books. பார்க்கப்பட்ட நாள் 2010-05-05.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Gaya, India". Archived from the original on 2010-12-23. பார்க்கப்பட்ட நாள் 2010-05-05.
- ↑ "In Bihar, Hindu period to pray for dead begins". Thaindian News. Archived from the original on 2012-10-08. பார்க்கப்பட்ட நாள் 2010-05-05.