பிபுதிபூஷன் பந்தோபாத்யாய்

இந்தியாவைச் சேர்ந்த வங்க மொழி எழுத்தாளர்

பிபுதிபூஷன் பந்தோபாத்யாய் (ஆங்கிலம்: Bibhutibhushan Bandyopadhyay) (12 செப்டம்பர் 1894 - 1 நவம்பர் 1950) [1] இவர் ஒரு இந்திய வங்காள எழுத்தாளர், மற்றும் நவீன பெங்காலி இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராவார். இவரது சிறந்த படைப்பு சுயசரிதை புதினமான பதேர் பாஞ்சாலி ( சாலையின் பாடல் ) என்பதாகும். இச்சமதி என்ற புதினதிற்காக மேற்கு வங்காளத்தின் மிகவும் மதிப்புமிக்க இலக்கிய விருதான இரபிந்திர புரஸ்கார் விருது 1951 ஆம் ஆண்டில் மரணத்திற்குப் பின் இவருக்கு வழங்கப்பட்டது. [2]

பிபுதிபூஷன் பந்தோபாத்யாய்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

நவீன மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் அமைந்துள்ள பசிர்காத்துக்கு அருகிலுள்ள பனிதார் என்ற கிராமத்தில் பந்தோபாத்யாய் குடும்பம் உருவானது. ஆயுர்வேத மருத்துவராக இருந்த பந்தோபாத்யாயின் தாத்தா வடக்கு 24 பர்கானா, பனகிராம் (இப்போது பங்கான்) கோபால்நகருக்கு அருகிலுள்ள பராக்பூர் கிராமத்தில் இறுதியில் குடியேறினார். இருப்பினும், பந்தோபாத்யாய் நதியா மாவட்டத்தின் கல்யாணிக்கு அருகிலுள்ள முராட்டிபூர் கிராமத்தில் தனது தாய் மாமாவின் வீட்டில் பிறந்தார். இவரது தந்தை மகானந்தா பந்தோபாத்யாய் சமசுகிருதஅறிஞராகவும், தொழில்முறை சொற்பொழிவாளராகவும் இருந்தார். மகானந்தா மற்றும் அவரது மனைவி மிருணாலினியின் ஐந்து குழந்தைகளில் மூத்தவர் பந்தோபாத்யாய். அவரது குழந்தை பருவ வீடு கோபால்நகருக்கு அருகிலுள்ள பராக்பூர் கிராமத்தில் இருந்தது. [3] இருப்பினும், பந்தோபாத்யாய் நதியா மாவட்டத்தின் கல்யாணிக்கு அருகிலுள்ள முராட்டிபூர் கிராமத்தில் தனது தாய் மாமாவின் வீட்டில் பிறந்தார். இவரது தந்தை மகானந்தா பந்தோபாத்யாய் சமசுகிருதஅறிஞராகவும், தொழில்முறை சொற்பொழிவாளராகவும் இருந்தார். மகானந்தா மற்றும் அவரது மனைவி மிருணாலினியின் ஐந்து குழந்தைகளில் மூத்தவர் பந்தோபாத்யாய். அவரது குழந்தை பருவ வீடு கோபால்நகருக்கு அருகிலுள்ள பராக்பூர் கிராமத்தில் இருந்தது.

கல்வி தொகு

பிரித்தானிய இந்தியாவின் மிகப் பழமையான நிறுவனங்களில் ஒன்றான போங்கான் உயர்நிலைப் பள்ளியில் பந்தோபாத்யாய் படித்தார். மேலும் திறமையான மாணவராகக் கருதப்பட்டார். நுழைவு மற்றும் இடைநிலை கலைத் தேர்வுகளில் முதல் பிரிவு இடத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள சுரேந்திரநாத் கல்லூரியில் (அப்போதைய இரிப்பன் கல்லூரி) பொருளாதாரம், வரலாறு மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் (எம்.ஏ) மற்றும் சட்ட வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் முதுகலை படிப்பை முடிக்கவில்லை. பின்னர் ஹூக்லியின் ஜாங்கிபாராவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். [2] [4]

தொழில் தொகு

பந்தோபாத்யாய் ஒரு எழுத்தாளராக மாறுவதற்கு முன்பு தனக்கும் இவரது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக பல்வேறு வேலைகளில் பணியாற்றினார். அவரது முதல் வேலை ஆசிரியர் பணியாக இருந்தது. ஆனால் அவர் பசு பாதுகாப்பு இயக்கத்தின் பயண விளம்பரதாரராகவும், பின்னர் கெலத்சந்திர கோசின் செயலாளராகவும் பணியாற்றினார். இதில் அவரது பாகல்பூர் தோட்டத்தின் நிர்வாகமும் அடங்கும். இவர் தனது குடும்பத்தை பயிற்றுவிக்கும் போது இசை மற்றும் தொண்டு ஆகியவற்றில் முக்கிய பெயரான கெலத்சந்திராவுடன் தொடர்பு கொண்டிருந்தார். கேலத்சந்திர நினைவுப் பள்ளியிலும் கற்பித்தல் பணியில் ஈடுபட்டார். [2] இறுதியில், பந்தோபாத்யாய் தனது சொந்த இடத்திற்கு திரும்பி, கோபால்நகர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். அவர் இறக்கும் வரை தனது இலக்கியப் பணிகளுடன் தொடர்ந்தார். சார்கண்டில் உள்ள காத்சிலா என்ற ஊரில் தங்கியிருக்கும் போது பதேர் பாஞ்சாலியை எழுதி வெளியிட்டார்.

நூல்கள் தொகு

  • பதேர் பாஞ்சாலி
  • அபராஜிதோ
  • ஆரண்யக் (தமிழில்: வனவாசி)
  • தேவஜன்
  • இச்சாமதி

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

பந்தோபாத்யாய் தனது ஆரம்ப நாட்களை மோசமான வறுமையில் கழித்தார். பின்னர் அவர் தனது குடும்பத்திற்கு நிதி ரீதியாக உதவினார். இருப்பினும் அவரது உதவியின் அளவு தெரியவில்லை. அவர் ஒரு வலுவான கட்டமைப்பைக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் காடுகளில் மைல் கணக்கில் நடந்து சென்றார், வழக்கமாக தனது குறிப்புப்புத்தகத்தை எழுதும் நோக்கத்திற்காக எடுத்துச் செல்வார்.

அவரது முதல் மனைவி கௌரி தேவி அவர்களுக்குத் திருமணமான ஒரு வருடம் கழித்து வாந்திபேதியால் இறந்தார். அவரது மரணம் மற்றும் பந்தோபாத்யாயின் தனிமை ஆகியவை இவரது சோகத்தின் கருப்பொருளுக்கு வழிவகுத்தன. இது அவரது ஆரம்பகால எழுத்துக்களில் ஒரு தொடர்ச்சியான மையக்கருவாக மாறியது. 46 வயதில், ராம சட்டோபாத்யா என்பவரை இரண்டாவதாக மணந்தார். இவர்களுக்கு தாரதாஸ் என்ற ஒரு மகன் 1947 இல் பிறந்தார்.

இறப்பு தொகு

பந்தோபாத்யாய் 1950 நவம்பர் 1 அன்று காட்சிலாவில் காலமானார். மரணத்திற்கான காரணம் மாரடைப்பு என அடையாளம் காணப்பட்டது . [5]

குறிப்புகள் தொகு

  1. "State Central Library Kolkata". Archived from the original on செப்டம்பர் 27, 2018. பார்க்கப்பட்ட நாள் September 12, 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 Banglapedia: National Encyclopedia of Bangladesh.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Sekhar" defined multiple times with different content
  3. Chattopadhyay, Sunil Kumar (1994). Bibhutibhushan Bandyopadhyay. Makers of Indian Literature (1st ). New Delhi: Sahitya Akademi. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7201-578-X. 
  4. Bibhutibhushan Bandopadhyay iloveindia.com. Retrieved 19 May 2013
  5. "Bandopadhyay's Death". Archived from the original on 3 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 October 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)