பிரமலைக் கள்ளர்

கள்ளர் சாதியின் ஒரு உட்பிரிவு

பிரமலைக் கள்ளர் (Piramalai Kallar) எனப்படுவோர் தமிழகத்தில் உள்ள கள்ளர் சமூகத்தின் கிளைப்பிரிவுகளில் உள்ள ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்களும் முக்குலத்தோர்களின் ஒரு பிரிவினர் ஆவர்.

வரலாறு தொகு

1645, 1652, 1655 மற்றும் 1656 தேதியிட்ட செப்புத்தகடு கல்வெட்டுகளில் பிரமலைக் கள்ளர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. இவற்றின் படி, திருமலை நாயக்கர் காலத்தில், இச்சமூகத்தின் உறுப்பினர்கள் கிராமங்களின் காவலர்களாக நியமிக்கப்பட்டனர். ஒரு கிராமத்திற்கு பொறுப்பான பிரமலைக் கள்ளர் குழு, அந்த கிராமத்தில் எந்தவொரு திருட்டுக்கும் ஈடுசெய்ய வேண்டியிருந்தது.[1]

மூக்கறு போரில் திருமலை நாயக்கர் தளபதி பின்னத்தேவரும், இராமநாதபுரம் இரகுநாத சேதுபதியின் தலைமையில் மைசூர் ஆட்சிப் பகுதியில் நுழைந்து எதிரிகளின் மூக்குகளை மதுரைக்கு அரிந்து கட்டி அனுப்பி வைத்தனர். அதற்க்காக திருமலை நாயக்கர் பின்னத்தேவருக்கு மூக்குப்பரி என்கிற பட்டத்தை வழங்கினார்.[2][3] ஊராண்ட உரப்பனூரைச்‌ சேர்ந்த பின்னத்தேவர் என்பவருக்கு திருமலை நாயக்கர்‌ தன்னரசாக ஆட்சி செய்ய அனுமதித்தார்.[4] திருமால் பின்னதேவர், தூங்காத்தேவர், சின்னி வீரத்தேவர், கழுவத்தேவர், மண்ணுலகந்தேவர், தூங்கத்தேவர், தக்கத்தேவர் போன்ற பிரமலைக் கள்ளர் உள்ளூர் தலைவர்களும் பஞ்சாயத்துகளை ஏற்பாடு செய்து நீதித்துறை கடமைகளைச் செய்தனர். இது 1655 கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.[1][5][6]

நீதித்துறை மற்றும் காவல்துறை என ஒரு தனி அமைப்புடன், இவர்கள் பிரித்தானிய ஆட்சியில் சேர மறுத்துவிட்டனர். 1767-ஆம் ஆண்டில், ஒரே நாளில் சுமார் 5000 கள்ளர்கள், மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே வரி செலுத்த மறுத்தபோது, பிரித்தானிய படைகளால் கொல்லப்பட்டனர்.[7]

பிரித்தானிய ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டதோடு, நாயக்கர் வம்சத்தின் வீழ்ச்சியுடனும், பிரமலைக் கள்ளர்கள் காவலர்களாக தங்கள் வேலையையும் இழக்கத் தொடங்கினர். 1800-1801-ஆம் ஆண்டு தென்னிந்திய கிளர்ச்சியில் அவர்கள் பங்கேற்றனர், இதன் விளைவாக மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்தன. கிளர்ச்சியடைந்த கள்ளர்கள் வரி செலுத்த மறுத்தபோது, ​​ஆங்கிலேயர்கள் காவல்காரர் முறையை ஒழித்தனர்.[8]

இதன் விளைவாக பிரமலைக் கள்ளர்கள் வறண்ட நில விவசாயத்தை நம்பி வறுமைக்கு தள்ளப்பட்டனர். இது ஆங்கிலேயர்களை தொடர்ந்து எதிர்க்கும் அதே வேளையில், கால்நடைகளையும், பொது திருடனையும் தப்பிப்பிழைக்க வழிவகுத்தது.[9] அதனால் இவர்களை குற்றப் பரம்பரை சட்டத்தின் கீழ் ஒரு சீர்மரபினராக வகைப்படுத்தப்பட்டனர்.[10][11]

இதனால் ஏப்ரல் 3, 1920 அன்று, பெருங்காமநல்லூர் கிராமத்தில் உள்ள பிரமலைக் கள்ளர்கள், இச்சட்டத்தை எதிர்த்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடினர். இக்கிராமத்தில் ஒரு நினைவுத் தூண் சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட 16 குடியிருப்பாளர்களைக் குறிப்பிடுகிறது.[12][13][14] இச்சட்டம் முதலில் 1871-இல் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் 1911-இல் திருத்தப்பட்ட இந்த சட்டம் 1948-இல் ரத்து செய்யப்பட்டது.[15]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Louis Dumont; A. Stern; Michael Moffatt (1986). A South Indian subcaste: social organization and religion of the Pramalai Kallar. Oxford University Press. https://books.google.com/books?id=eQduAAAAMAAJ. பார்த்த நாள்: 21 March 2012. 
  2. "மூக்கறு மண்டபம் என்கிற சேதுபதி மண்டபம் சொல்லும் மதுரையின் கதை". ஆனந்த விகடன். https://www.vikatan.com/literature/arts/madurai-landmarks-sethupathi-mandapam-and-its-painful-history. 
  3. "King Thirumalai Nayak and the Kallar connection". தி இந்து. https://www.thehindu.com/news/cities/Madurai/king-thirumalai-nayak-and-the-kallar-connection/article32431472.ece. 
  4. Inthiya Viduthalaip Porattaththil Perungamanallur. பக். [ 17]. https://archive.org/details/aclmku0000094a1747/page/16/mode/2up. 
  5. "Copper plate dating back to 1655 CE found". The Hindu. 2014-04-27. http://www.thehindu.com/news/national/tamil-nadu/copper-plate-dating-back-to-1655-ce-found/article5951669.ece. பார்த்த நாள்: 2016-10-07. 
  6. தமிழக கள்ளர் வரலாறுl=https://archive.org/details/tamilaga-kallar-varalaru-compressed/page/130/mode/2up?q. பக். [ 130]. 
  7. "Taking the road less travelled". The Hindu. 2013-10-24. http://www.thehindu.com/books/books-authors/taking-the-road-less-travelled/article5268387.ece. பார்த்த நாள்: 2016-10-07. 
  8. K. Gowri, Madurai under the English East India Company (1801 – 1857),Raj Publishers, Madurai, 1987, p.9.
  9. David Arnold ‘Dacoity and Rural Crime in Madras’, The Journal of Peasant Studies, Vol.6, No.2, January 1979, p.158
  10. "The grim story behind a small settlement". The Hindu. 2013-04-30. http://www.thehindu.com/todays-paper/tp-national/the-grim-story-behind-a-small-settlement/article4669070.ece. பார்த்த நாள்: 2016-10-07. 
  11. Joseph, George Gheverghese (2003). George Joseph, the Life and Times of a Kerala Christian Nationalist. Orient Blackswan. பக். 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8-12502-495-8. https://books.google.co.uk/books?id=A6MfPh-9DiEC&pg=PA70. 
  12. http://www.thehindu.com/news/cities/Madurai/perungamanallur-massacre-a-resistance-against-coloniser/article3277717.ece 'Perungamanallur massacre,' a resistance against coloniser The Hindu
  13. http://dinamani.com/editorial_articles/article1528028.ece?service=print[தொடர்பிழந்த இணைப்பு] தென்னக ஜாலியன் வாலாபாக் தினமணி
  14. http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/namma-madurai-massacre-in-a-village/article2319054.ece Namma Madurai - Massacre in a village The Hindu
  15. "Colonial Act still haunts denotified tribes: expert". The Hindu. 2008-03-27. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/colonial-act-still-haunts-denotified-tribes-expert/article1227400.ece. பார்த்த நாள்: 2016-10-07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமலைக்_கள்ளர்&oldid=3925395" இலிருந்து மீள்விக்கப்பட்டது