புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி

புதிய சனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சி (New-Democratic Marxist-Leninist Party, NDMLP) என்பது இலங்கையில் நீண்டகாலமாக இயங்கி வரும் ஒர் இடதுசாரி சமூக, அரசியல் கட்சி ஆகும். மாக்சியம், லெனினியம், மற்றும் மாவோயிசம் ஆகிய சிந்தனைகளைத் தனது வழிகாட்டியாகக் கொண்டுள்ளது.

New-Democratic Marxist-Leninist Party
නව-ප්‍රජාතන්ත්‍රවාදී මාක්ස්-ලෙනින්වාදී පක්ෂය
புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிச கட்சி
செயலாளர் நாயகம்சி. கா. செந்திவேல்
தொடக்கம்3 சூலை 1978
பிரிவுஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிசம்)
கொள்கைஇடதுசாரி
மாக்சியம், லெனினியம், மற்றும் மாவோயிசம்
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி
பன்னாட்டு சார்புபுரட்சிகரக் கட்சிகள் அமைப்புக்களின் அனைத்துலக ஒருங்கமைப்பு (ICOR)
இணையதளம்
http://ndmlp.net/

1960களில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு எதிர்ப்புப் போராட்டம், மலையகத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்க எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றில் இந்தக் கட்சியின் பங்கு கணிசமானது. இடதுசாரிய அடிப்படையில் வர்க்க அரசியலை இவர்கள் முன்னெடுக்கிறார்கள்.

வரலாறு தொகு

இக்கட்சி முதன் முதலாக 1978 ஆம் ஆண்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்ற பெயரில் நிறுவப்பட்டது. இதன் நிறுவக பொதுச் செயலாளர் கே. ஏ. சுப்பிரமணியம் ஆவார். 1991 ஆம் ஆண்டு நடந்த தனது இரண்டாவது தேசிய மாநாட்டில் இது தனது பெயரை புதிய சனநாயகக் கட்சி என மாற்றிக்கொண்டது. பின்னர் 2010 சூன் மாதத்தில் கொழும்பில் இடம்பெற்ற தனது 5வது அனைத்து இலங்கை மாநாட்டில் தனது பெயரை புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி என மாற்றிக் கொண்டது.[1] இக்கட்சி இலங்கையின் தேர்தல் ஆணையகத்தில் 2020 அக்டோபர் 14 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது. இதன் தேர்தல் சின்னம் "வெந்நீர்க்கெண்டி" (கேத்தல்) ஆகும்.

முக்கிய நான்கு முரண்பாடுகள் தொகு

இக்கட்சி இலங்கையில் நான்கு முக்கிய முரண்பாடுகள் உண்டு என்றும், நான்கு முனைகளிலும் சமகாலத்தில் போராட வேண்டும் என்றும் கூறுகிறது. இதில் இன முரண்பாடு முதன்மை முரண்பாடாகவும் வர்க்க முரண்பாடு அடிப்படை முரண்பாடாகவும் கொள்ளப்படுகிறது.

  • இன முரண்பாடு
  • வர்க்க முரண்பாடு
  • சாதிய முரண்பாடு
  • பெண்கள் மீதான அடக்குமுறை (பால்நிலை முரண்பாடு)

தேசிய இனப்பிரச்சினையில் கட்சியின் நிலைப்பாடு தொகு

இலங்கையில், சிங்களவர், இலங்கைத் தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் எனும் நான்கு தேசிய இனங்களும் பல்வேறு இனக்குழுக்களும் பழங்குடிகளும் வாழ்வதாக வரையறுக்கும் இக்கட்சி, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் நான்கு தேசிய இனங்களுக்குமான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வினை முன்மொழிகிறது.[2]

2010 மத்திய குழு தொகு

அனைத்துலக உறவுகள் தொகு

உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் இயங்கும் மார்க்சிச - லெனினிசக் கட்சிகளுடனும் இடதுசாரிக் கட்சிகளுடனும் உறவினைப் பேணும் இக்கட்சி, புரட்சிகரக் கட்சிகள் அமைப்புக்களின் அனைத்துலக ஒருங்கமைப்பு (ICOR) இல் அங்கம் வகிக்கிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாடு[தொடர்பிழந்த இணைப்பு], சூன் 29, 2010
  2. "New-Democratic Marxist-Leninist Party Proposals for a Solution to the Sri Lankan National Question". Archived from the original on 2017-02-11. பார்க்கப்பட்ட நாள் 2017-02-23.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-16. பார்க்கப்பட்ட நாள் 2017-02-23.

வெளி இணைப்புகள் தொகு