மச்ச அவதாரம்

விஷ்ணுவின் அவதாரங்களுள் (மீன்) ஒன்று

மச்ச அவதாரம் என்பது வைணவ சமயக் கடவுள் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் முதல் அவதாரம் ஆகும். மச்சம் அல்லது மத்ஸ்யம் என்பது சமசுகிருத மொழியில் மீன் எனப் பொருள் தரும். இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவருபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.[1]

மச்ச அவதாரம்
மச்ச அவதாரம்
தேவநாகரிमत्स्य
வகைவிஷ்ணுவின் அவதாரம்


பிரளயத்தின் போது பெருங்கடலில் படகில் இருந்த வைவஸ்த மனு மற்றும் சப்தரிஷிகளையும் மச்ச அவதாரம் கொண்டு விஷ்ணு மீட்கும் காட்சி

பெரும் பிரளயத்தின் போது விஷ்ணு மீன் அவதாரம் எடுத்து, வைவஸ்தமனுவின் குடும்பத்தினரையும், சப்தரிஷிகளையும் காத்து, மீண்டும் பூவுலகில் அனைத்து உயிரினங்களையும் செழிக்க வைத்தார். 

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Matsya HINDUISM
"https://ta.wikipedia.org/w/index.php?title=மச்ச_அவதாரம்&oldid=3784080" இலிருந்து மீள்விக்கப்பட்டது