மண்டி மாவட்டம்

மண்டி மாவட்டம் (முன்பு மந்தாவ்யா நகர்) வட இந்தியாவில் உள்ள இமாசலப் பிரதேச மாநிலத்தின் மத்திய மாவட்டம் ஆகும். மண்டி நகரம் இம்மாவட்டத்தின் தலைமையகம். இந்நகரம் இதன் கோவில் கட்டடக்கலைக்குப் புராண மற்றும் வரலாற்றுச் சிறப்பு பெற்றது. பியாசு ஆற்றின் கரையோரம் மற்றும் நகரத்தினுள் பல பழங்கால கோவில்கள் இருப்பதால் இந்நகரம் சோட்டா காசி என அழைக்கப்படுகிறது. பியாசு ஆறு இந்நகரின் வழியாகப் பாய்கிறது. 2011 கணக்கெடுப்பின்படி மண்டி இமாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் காங்ரா மாவட்டத்தை அடுத்த இரண்டாவது மிக அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டம் ஆகும்.[1]

மண்டி மாவட்டம்
மண்டிமாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம்
மாநிலம்இமாசலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்மண்டி, இந்தியா
பரப்பு3,951 km2 (1,525 sq mi)
மக்கட்தொகை900,987 (2001)
மக்கள்தொகை அடர்த்தி228/km2 (590/sq mi)
முதன்மை நெடுஞ்சாலைகள்NH21
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி மண்டி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 999,518.[1] இது தோராயமாக பிஜி நாட்டின் மக்கட்தொகைக்குச் சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 446வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 253 inhabitants per square kilometre (660/sq mi).[1] மேலும் மண்டி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 10.89%.[1] மண்டி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 1012 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் மண்டி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 82.81%.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டி_மாவட்டம்&oldid=3890728" இலிருந்து மீள்விக்கப்பட்டது