மண்டூர் (Mandur) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரில் இருந்து தென் திசையில் சுமார் நாற்பது மைல்களுக்கப்பால் அமைந்துள்ள ஒரு கிராமம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நாநிலங்களையும் கொண்டதாக இக்கிராமம் காணப்படுகிறது.

மண்டூர்
City
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவு?
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

மண்டு மரங்கள் அதிகளவில் காணப்பட்டதால் காரணப்பெயராகவே மண்டூர் எனும் பெயர் உருவானதாக கூறப்படுகின்றது. வரலாற்றுச்சிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி கோயில் இங்கு அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டூர்&oldid=3006133" இலிருந்து மீள்விக்கப்பட்டது