மலாக்கா சுல்தானகம்

மலாக்கா சுல்தானகம் (மலாய் மொழி: Kesultanan Melaka; ஆங்கிலம்: Sultanate of Malacca; ஜாவி: کسلطانن ملاک); என்பது பரமேசுவரா எனும் சிங்கப்பூர் அரசரால் 1400-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட ஒரு சுல்தானகம் ஆகும். பரமேசுவரா என்பவர் இசுகந்தர் ஷா என்றும் அழைக்கப் படுகிறார்.[1]

மலாக்கா சுல்தானகம்
Malacca Sultanate
كسلطانن ملايو ملاك
1402–1511
15-ஆம் நூற்றாண்டில் சுல்தானகத்தின் ஆதிக்கம்
15-ஆம் நூற்றாண்டில் சுல்தானகத்தின் ஆதிக்கம்
தலைநகரம்மலாக்கா
பேசப்படும் மொழிகள்மலாய்
சமயம்
இசுலாம்
அரசாங்கம்Monarchy (மரபுவழி அரசாட்சி)
சுல்தான் 
வரலாறு 
• தொடக்கம்
1402
1511
நாணயம்தங்க, வெள்ளிக் காசுகள்
முந்தையது
பின்னையது
சிறீவிஜயா
ஜொகூர் சுல்தானகம்
பேராக் சுல்தானகம்
[[போர்த்துக்கீசிய மலாக்கா]]

15-ஆம் நூற்றாண்டில், மலாக்கா சுல்தானகத்தின் அதிகார உச்சத்தில், தீபகற்ப மலேசியாவின் பெரும்பகுதிகளும்; ரியாவ் தீவுகளும் உள்ளடக்கியதாக இருந்தது. அதன் காலத்தில் மிக முக்கியமான கடல்சார் துறைமுகங்களில் ஒன்றாகவும் விளங்கியது.[2]

பரபரப்பான பன்னாட்டு வர்த்தக துறைமுகமாகவும்; இஸ்லாமிய கற்றல் மற்றும் பரப்புதலுக்கான மையமாகவும் உருவெடுத்தது. மேலும் மலாய் மொழி, இலக்கியம் மற்றும் கலைகளின் வளர்ச்சிக்கும் ஊக்கமளித்தது.[3]

பொது தொகு

1511-ஆம் ஆண்டில், மலாக்காவின் தலைநகரம் போர்த்துகீசியப் பேரரசிடம் வீழ்ந்தது. மலாக்கா சுல்தானகத்தின் கடைசி சுல்தான் மகமுட் ஷா (1488 - 1511) மலாக்காவை விட்டு வெளியேறினார்.

அதன் பின்னர் அவரின் சந்ததியினர் ஜொகூர் சுல்தானகம் மற்றும் பேராக் சுல்தானகம் ஆகிய இரு புதிய சுல்தானகங்களை நிறுவினார்கள்.[4]

தாய்லாந்திற்கு கீழும் சுமாத்திராவிற்கு மேலேயும் உள்ள இடைப்பட்ட நிலத்தில் மலாக்கா சுல்தானகம் பரவியிருந்தது. இதன் தலைநகரத்தில் போர்த்துகீசியர் 1511-ஆம் ஆண்டில் படையெடுத்தனர். இதன் பின்னர் சுல்தான் மகமுட் ஷாவின் இரண்டாவது மகனார், அலாவுதீன் ரியாட் ஷா II என்பவரால் ஜொகூர் சுல்தானகம் நிறுவப்பட்டது.

மலாக்கா சுல்தான்கள் தொகு

மலாக்கா சுல்தான்கள் ஆட்சிக்காலம் தொகு

மலாக்கா சுல்தான்கள் ஆட்சி காலம்
பரமேசுவரா
1400–1414
மெகாட் இசுகந்தர் ஷா
1414–1424
சுல்தான் முகமது ஷா
1424–1444
பரமேசுவரா தேவ ஷா
1444–1446
சுல்தான் முசபர் ஷா
1446–1459
சுல்தான் மன்சூர் ஷா
1459–1477
சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா
1477–1488
சுல்தான் மகமுட் ஷா
1488–1511
சுல்தான் அகமட் ஷா
1511–1513
சுல்தான் மகமுட் ஷா
1513–1528

மேற்கோள்கள் தொகு

  1. Georges Coedès (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. பக். 245–246. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0368-1. https://books.google.com/books?redir_esc=y&id=iDyJBFTdiwoC&pg=PA246. 
  2. w:Paul Wheatley (geographer) (1961). The Golden Khersonese: Studies in the Historical Geography of the Malay Peninsula before A.D. 1500. Kuala Lumpur: University of Malaya Press. பக். 306–307. இணையக் கணினி நூலக மையம்:504030596. https://archive.org/details/goldenkhersonese0000unse. 
  3. Borschberg, Peter (28 July 2020). "When was Melaka founded and was it known earlier by another name? Exploring the debate between Gabriel Ferrand and Gerret Pieter Rouffaer, 1918−21, and its long echo in historiography". Journal of Southeast Asian Studies 51 (1-2): 175-196. doi:10.1017/S0022463420000168. https://www.cambridge.org/core/journals/journal-of-southeast-asian-studies/article/abs/when-was-melaka-founded-and-was-it-known-earlier-by-another-name-exploring-the-debate-between-gabriel-ferrand-and-gerret-pieter-rouffaer-191821-and-its-long-echo-in-historiography/CAA1748860BCD9B6247F6BFA6231278A. 
  4. w:Paul Wheatley (geographer) (1961). The Golden Khersonese: Studies in the Historical Geography of the Malay Peninsula before A.D. 1500. Kuala Lumpur: University of Malaya Press. பக். 306–307. இணையக் கணினி நூலக மையம்:504030596. https://archive.org/details/goldenkhersonese0000unse. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாக்கா_சுல்தானகம்&oldid=3877233" இலிருந்து மீள்விக்கப்பட்டது