மார்ட்டி ஆத்திசாரி

மார்ட்டி ஒய்வா கலெவி ஆத்திசாரி (Martti Oiva Kalevi Ahtisaari, கேட்க, 23 சூன் 1937 – 16 அக்டோபர் 2023) என்பவர் பின்லாந்தின் முன்னாள் குடியரசுத் தலைவரும் (1994–2000), ஐக்கிய நாடுகள் அமைதித் தூதுவரும் ஆவார். 2008 இல் கொசோவோ பேச்சுக்களில் ஐ. நா சார்பில் முக்கிய பொறுப்பு வகித்தார். கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக பல கண்டங்களிலும் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டமைக்காகவும் கொசோவோ, வட அயர்லாந்து உட்பட பல பன்னாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியமைக்காகவும், 2008 ஆம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கினர்[1].

மார்ட்டி ஆத்திசாரி
Martti Ahtisaari
பின்லாந்தின் 10வது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச்சு 1, 1994 – மார்ச்சு 1, 2000
முன்னையவர்மவுனோ கொய்விஸ்தோ
பின்னவர்தர்யா ஹலோனென்
தான்சானியா, சாம்பியா, சோமாலியா, மொசாம்பிக் நாடுகளுக்கான பின்லாந்து தூதுவர்
பதவியில்
1973–1977
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1937-06-23)சூன் 23, 1937
பின்லாந்து
இறப்புஅக்டோபர் 16, 2023(2023-10-16) (அகவை 86)
எல்சிங்கி, பின்லாந்து
தேசியம் பின்லாந்து
அரசியல் கட்சிபின்லாந்து சமூக மக்களாட்சிக் கட்சி
துணைவர்ஏவா அஹ்திசாரி

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டி_ஆத்திசாரி&oldid=3815551" இலிருந்து மீள்விக்கப்பட்டது