மூன்றாம் கேரள வர்மன்

கொச்சி மன்னர்

மூன்றாம் கேரள வர்மன் (Kerala Varma III) (இறப்பு: 1828 ஆகத்து) விருளம் தம்புரான் எனப் பிரபலமாக அழைக்கப்படும் இவர், 1809 முதல் 1828 வரை கொச்சி இராச்சியத்தை ஆண்ட ஒரு இந்திய மன்னனாவார். [1]. 1809 மே 6 ஆம் தேதி இவரது ஆட்சியில் பிரிட்டிசாரின் ஆதிக்கம் உறுதி செய்யப்பட்டது.

மூன்றாம் கேரள வர்மன்
மகாராசா
கொச்சியின் மன்னன்
ஆட்சிக்காலம்1809 சனவரி — 1828 ஆகத்து
முடிசூட்டுதல்1809 மே 6
முன்னையவர்பத்தாம் இராம வர்மா
பின்னையவர்பதினோறாம் இராம வர்மா
இறப்பு1828 ஆகத்து
வெள்ளரப்பள்ளி அரண்மனை, புத்தியேட்டம், காலடி, இந்தியா
மரபுகொச்சி இராச்சியம்
மதம்இந்து சமயம்

ஆட்சி தொகு

இவர், தனது சகோதரர் பத்தாம் இராம வர்மா 1809 சனவரியில் இறந்தவுடன் அரியணையில் ஏறினார். இவர் பதவிக்கு வந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, கொச்சி மீதான பிரிட்டிசு பாதுகாவலர் உறுதிசெய்யப்பட்டு, இந்த இராச்சியம் பிரிட்டிசு இந்தியாவின் ஒரு சுதேச அரசாக சேர்க்கப்பட்டது.

இவரது ஆட்சியின் ஆரம்ப பகுதி பிரிட்டிசு தலையீட்டிற்கு எதிராக கொச்சி மன்னனிடம் பிரதம அமைச்சராக இருந்த பாளையத்து அச்சன் கோவிந்தன் மேனனின் கிளர்ச்சியைக் கண்டது. கோவிந்தன் மேனன் இறுதியில் கைது செய்யப்பட்டு பின்னர் சென்னைக்கும் பின்னர், மும்பைக்கும் நாடு கடத்தப்பட்டார் . அவர் 1832 இல் சிறைப்பிடிக்கப்பட்டார். கோவிந்தன் மேனனுக்கு பதிலாக திவானாக குஞ்ஞிகிருஷ்ணன் மேனன் (1809–12) நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின் ஜான் முன்ரோ (1812–15) மற்றும் சேசகிரி ராவ் (1815–30) ஆகியோர் அப்பதவிக்கு வந்தனர். மேலஞ்சேரி, திருப்பூணித்துறை, ஆலப்புழா ஆகிய பகுதிகளில் கிளர்ச்சிகளைத் தடுக்க பிரிட்டிசு துருப்புக்கள் காவலில் வைக்கப்பட்டன. படைகள் 1809 அக்டோபர் வரை இருந்தன. 1814 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு ஒப்பந்தந்தம் மூலம் கொச்சி நகரம் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொச்சியில் ஒரு மாவட்ட நீதிமன்றம் 1812 முதல் 1817 வரை செயல்பட்டது.

கேரள வர்மாவுக்கு தத்துவத்தில் ஆழ்ந்த ஆர்வம் இருந்தது. ஆகத்து 1828 இல் இவர் இறந்தார். இவருக்குப் பின்னர் இவரது மருமகன் பதினோறாம் இராமவர்மா ஆட்சிக்கு வந்தார்.

குறிப்புகள் தொகு

  1. "List of rulers of Kochin". worldstatesmen.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_கேரள_வர்மன்&oldid=3084398" இலிருந்து மீள்விக்கப்பட்டது