மேலகரம் (ஆங்கிலம்:Melagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மேலகரம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் தென்காசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 12,860 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.townpanchayat.in/melagaram

அமைவிடம் தொகு

மேலகரம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடம் திருநெல்வேலியிலிருந்து 65 கிமீ தொலைவிலும்; வட்டத் தலைமையிடமான தென்காசியிலிருந்து 3 கிமீ தொலவிலும், குற்றாலத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 3 கிமீ தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

6.56 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேலகரம் பேரூராட்சி 5884 வீடுகளும், 14535 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

புகழ்பெற்றவர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. மேலகரம் பேரூராட்சியின் இணையதளம்
  4. மேலகரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Melagaram Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலகரம்&oldid=3395298" இலிருந்து மீள்விக்கப்பட்டது