மோகனம் 28ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 4 ஆவது இராகமாகிய ஹரிகாம்போஜியின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும். சுபகரமான இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.

இலக்கணம் தொகு

 
மோகனம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி23 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ் த2 ப க3 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(3), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள் தொகு

  • மத்திமம், நிஷாதம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
  • இது உபாங்க இராகம் ஆகும்.
  • ரி, க, த என்பன ராகச்சாயா ஸ்வரங்கள். இதில் வரும் ஜண்டை ஸ்வரங்களும், தாடுப் பிரயோகங்களும் ராக ரஞ்சகமானவை.
  • இது திரிஸ்தாயி இராகம் ஆகும். மேலும் இரவில் பாட இது மிக ரஞ்சகமாக இருக்கும்.
  • இது ஒரு புராதன இராகம் ஆகும். எல்லா உருப்படி வகைகளையும் இந்த இராகத்தில் காணலாம். சுலோகங்களும், விருத்தங்களும் பாடுவதற்கேற்ற இராகம் ஆகும். இது ஒரு வர்ணனைக்குரிய இராகம் ஆகும். இசை நாடகங்களிலும், நிருத்திய நாடகங்களிலும் காணப்படும் பிரசித்த இராகங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • இது மனிதவர்க்கத்துக்குத் தெரிந்த மிகப் பழைய இராகம் ஆகும். இந்த இராகத்தில் வரும் ஸ்வரங்கள் ஸட்ஜ - பஞ்சம முறையில் முதன் முதலில் தோன்றும் ஸ்வரங்களாகும். இந்த விடயம் ஆதி காலத்திலேயே எல்லா நாட்டு இசைக் கலைஞர்களாலும் கையாளப்பட்டு வந்தது. ஆதிவாசிகளின் இசையிலும் பாமரமக்கள் இசையிலும் கூட இவ்விராகம் வழக்கத்தில் இருந்து வருகிறது.
  • இந்துஸ்தானி இசையில் பூப் என்பது இவ்விராகமே. சர்வ ஸ்வர மூர்ச்சனாகர ஜன்ய இராகம்.
  • இவ்விராகத்தின் ரிஷப, காந்தார, பஞ்சம, தைவத, மூர்ச்சனைகளே முறையே மத்தியமாவதி, இந்தோளம், சுத்தசாவேரி, உதயரவிச்சந்திரிக்கா ஆகிய இராகங்களாக ஒலிக்கின்றன. முல்லைப்பண் எனக் குறிக்கப்படுவது மோகன இராகமே ஆகும்.
  • மாணிக்கவாசகரின் திருவாசகம் தொன்று தொட்டு இந்த இராகத்தில் பாடப்பட்டு வருவது இவ்விராகத்தின் சிறப்பை உணர்த்துகின்றது.

உருப்படிகள் தொகு

மோகன இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள் தொகு

  • நின்னுகோரி வர்ணம் :- அக்னி நட்சத்திரம்
  • அண்ணாமலை அண்ணாமலை :- அண்ணாமலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகனம்&oldid=3904177" இலிருந்து மீள்விக்கப்பட்டது