யதுகுலகாம்போதி

யதுகுலகாம்போதி இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும். பண்டைய தமிழிசைப் பண்களில் செவ்வழி என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1]

இலக்கணம் தொகு

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), கைசிக நிசாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[2]:

ஆரோகணம்: ச ரி2131 ப த2 ச்
அவரோகணம்: ச் நி22 ப ம13 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்தில் காந்தாரம் ஒழுங்குமாறி வந்திருப்பதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. அ. கி. மூர்த்தி (1998) (in தமிழ்). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். பக். 161. https://ta.wikisource.org/s/4u7c. 
  2. Music Handbook - Raga Index -Y 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யதுகுலகாம்போதி&oldid=3765663" இலிருந்து மீள்விக்கப்பட்டது