ரேனிகுண்டா (திரைப்படம்)

2009 தமிழ் திரைப்படம்

ரேனிகுண்டா (Renigunta) 2009இல் தமிழ் மொழியில் வெளிவந்த அதிரடித் திரைப்படம் ஆகும். இதை எழுதி இயக்கியவர் ஆர். பன்னீர்செல்வம், இப்படத்தில் ஜானி, சனுஷா, மற்றும் நிஷாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2] இளம் குற்றவாளிகள், குற்றங்களை செய்ய தூண்டிய காரணங்களை பற்றிய படமாகும். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ரேணிகுண்டா என்ற நகரத்தின் பெயரைக் கொண்டது, அங்கு நடக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியை பிரதிபலிக்கிறது. 2012இல் இப்படம் தெலுங்கு மொழியில் மாற்றம் செய்து ஆந்திரப் பிரதேசத்தில் வெளியிடப்பட்டது.[3] 2016இல் "மாண்டியா டு மும்பை" என்ற பெயரில் கன்னட மொழியில் வெளியிடப்பட்டது.

ரேனிகுண்டா
இயக்கம்ஆர். பன்னீர்செல்வம்
தயாரிப்புஎஸ். மகேந்திர குமார் ஜெயின்
கதைசிங்கம்புலி (வசனம்)
திரைக்கதைஆர். பன்னீர்செல்வம்
இசைகணேஷ் ராகவேந்திரா
நடிப்புஜானி
சனுஷா
நிஷாந்த்
ஒளிப்பதிவுசக்தி
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்பிலிம் பேப்ரிகேட்டர்ஸ்
விநியோகம்எஸ். எஸ். சக்கரவர்த்தி
வெளியீடுதிசம்பர் 4, 2009 (2009-12-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

இப்படத்தின் கதை தமிழ்நாட்டின் மதுரையில் தொடங்குகிறது, சக்தி (ஜானி), தனது பெற்றோருடன் மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துகிறான். ஒரு அதிர்ச்சி சம்பவம் அவனது வாழ்க்கையை மாற்றுகிறது, அவனது பெற்றோர்கள் சமூக விரோத சக்திகளால் படுகொலை செய்யப்படுகின்ற்னர். அதற்கு சக்தி பழிவாங்க முற்படும்போது, அவன் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறான், அங்கே காவலாளிகளால் கடுமையாக தாக்கப்படுகிறான். சிறையில் இருக்கும்போது, அவன் நான்கு இளம் குற்றவாளிகளான பாண்டுரங்கன் என்கிற பாண்டு (நிஷாந்த்), பிரேம் குமார் என்கிற தாபா (தீபெட்டி கணேசன்), மாரி (தமிழ்) மற்றும் மைக்கேல் (சந்தீப்) ஆகியோருடன் நட்புடன் இருக்கிறான். சிறைச்சாலைகளில் இருந்த குற்றவாளிகள் சிறைக்கதவுகளை உடைத்து வெளியேறும் போது , சக்தியும் அவனது நண்பர்களும் அவர்களைப் பின்தொடர்ந்து தப்பிக்கிறார்கள், மேலும் சக்தி தனது பெற்றோரின் கொலையாளிகளுக்கு பழிவாங்குவதற்கு முயல்கிறான். பின்னர், அவர்கள் மும்பைக்கு செல்ல நினைக்கிறார்கள்..[4] அவர்கள் ரேனிகுண்டாவில் இறங்க வேண்டி வருகிறது, அவர்கள் கொலையாளிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்படும் பங்கர் என்பவனிடம் போய் சேர்கிறார்கள். பிறகு அவர்களின் நடக்கும் மாற்றங்களே மீதிக்கதையாகும்.

நடிகர்கள் தொகு

  • ஜானி - சக்தி
  • சனுஷா - வாய் பேச முடியாத பெண்
  • நிஷாந்த் - பாண்டுரங்கன்
  • சந்தீப் - மைக்கேல்
  • தீப்பெட்டி கணேசன்
  • தமிழ் - மாரி
  • சஞ்சனா சிங் - அக்காள்
  • "நந்தா" சரவணன் - காவல் துறை அதிகாரி ராதாகிருஷ்ணன்[5]
  • எஸ். இளங்கோ - சக்தியின் தந்தை[5]
  • சுஜாதா சிவக்குமார் - சக்தியின் தாயார்[5]
  • ரிஷா[5]

ஒலித்தொகுப்பு தொகு

படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருந்தார் மற்றும் பாடல்களை பிறைசூடன், யுகபாரதி மற்றும் நா. முத்துக்குமார் ஆகியோர் எழுதியிருந்தனர்.[6]

வரவேற்பு தொகு

"ரேனிகுண்டா" மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.,[7] 2009 ஆம் ஆண்டின் சிறந்த இலாபகரமான தமிழ் திரைப்படமாக, 0.65 கோடி லாபம் ஈட்டியது.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "Review: Renigunta loses the plot — Rediff.com Movies". Movies.rediff.com. 2009-12-04. பார்க்கப்பட்ட நாள் 2012-03-12.
  2. "Find Tamil Movie Renigunta, Renigunta Reviews, Expert Review and Casts". Jointscene.com. Archived from the original on 25 பெப்பிரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச்சு 2012.
  3. "Renigunta Movie Review". 8 March 2012. http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movie-reviews/Renigunta/movie-review/12193449.cms. பார்த்த நாள்: 28 October 2015. 
  4. "Review: no more violence says renigunta director panneerselvam". kollywoodtoday.net. Archived from the original on 2013-01-08. பார்க்கப்பட்ட நாள் 2012-07-12.
  5. 5.0 5.1 5.2 5.3 "தினமலர் விமர்சனம்: ரேனிகுண்டா" (in tamil). Dina Malar. 18 December 2009. பார்க்கப்பட்ட நாள் 29 October 2015. ரிஷா / நந்தா சரவணன் / இளங்கோ / சுஜாதா{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-15. பார்க்கப்பட்ட நாள் 2019-03-01.
  7. "Ranking based on Chennai Box Office Collections from Dec 25th 2009 to Dec 27th 2009". பார்க்கப்பட்ட நாள் 28 October 2015.
  8. "Box Office Top 20 Tamil Movies of 2009". பார்க்கப்பட்ட நாள் 28 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேனிகுண்டா_(திரைப்படம்)&oldid=3671252" இலிருந்து மீள்விக்கப்பட்டது