வராக ஆறு (விழுப்புரம்)

வராக ஆறு, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓடும் முக்கிய ஆறு ஆகும். பாலாறு ஆற்றுப்படுகைக்கும் பெண்ணையாறு ஆற்றுப்படுகைக்கும் நடுவில் அமைந்துள்ளது வராக ஆற்றுப்படுகை.[1] அன்னமங்கலம், நரியாறு, தொண்டியாறு, பம்பையாறு, பம்பை ஓடை, செங்கை ஓடை போன்றவை இதன் துணையாறுகளாகும். இந்த ஆறு 78.50 கி.மீ நீளமும் 1936.75 கி.மீ2 நீர்ப்பிடிப்புப் பகுதியும் கொண்டது.[2]

அணைகள் தொகு

வராக ஆற்றிற்கும் தொண்டியாற்றிற்கும் இடையே 4,511 மீட்டர் நீளமும் 605 அடி3 கொள்ளளவும் கொண்ட வீடூர் அணை உள்ளது.[3] இவ்வணையின் மூலம் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் 3,200 ஏக்கர் பாசம் வசதி பெறப்படுகிறது.


இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Mineral Exploration-S. Rajendran, K. Srinivasamoorthy, S. Aravindan, Annamalai University
  2. "ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை (IAMWARM)" (PDF). Archived from the original (PDF) on 2010-12-26. பார்க்கப்பட்ட நாள் 2012-05-06.
  3. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வராக_ஆறு_(விழுப்புரம்)&oldid=3570893" இலிருந்து மீள்விக்கப்பட்டது