வராக நதி என்பது தேனி மாவட்டத்தில் ஓடும் ஆறுகளுள் ஒன்றாகும். மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தொடங்கும் இந்த ஆறு தேனி மாவட்டத்தில் பெரியகுளம், வடுகபட்டி அ.மேலவாடிப்பட்டி எனும் ஊர்களின் வழியாகப் பயணித்து வைகை ஆற்றில் கலக்கிறது. சங்கமம் திரைப்படத்திற்காக “வராக நதிக்கரையோரம்...” என்று இந்த நதியின் பெயரைப் பயன்படுத்தி கவிஞர் வைரமுத்து, ஒரு பாடல் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வராக_நதி&oldid=3394194" இலிருந்து மீள்விக்கப்பட்டது