வாசிம்பா (Vazimba) என்பவர்கள் பிரபலமான நம்பிக்கையின் படி, மடகாசுகரில் குடியேறிய முதல் மக்களாவர். வாசிம்பாவின் உடல் தோற்றம் குறித்த நம்பிக்கைகள் பிராந்திய மாறுபாட்டை பிரதிபலிக்கும்போது, அவர்கள் பொதுவாக சராசரி மனிதனை விட சிறியவர்களாக விவரிக்கப்படுகின்றனர். சில விஞ்ஞானிகள் அவர்கள் குடியேறிய ஒரு பிக்மி மக்களாக இருக்கலாம் (எனவே ஒரு தனி மலகாசி இனக்குழு ) என்று ஊகிக்க்கின்றனர். இந்த இனக்குழுக்கள் நவீன இந்தோனேசியாவைக் கொண்ட தீவுகளிலிருந்து, பொ.ச.மு. 500 முதல் கி.பி 500 வரையிலான காலகட்டத்தில் மடகாசுகரில் குடியேறியது. இந்த காலகட்டத்தில் தீவின் முதல் குடியேற்றம் மற்றும் மனித குடியேற்றவாசிகளின் அதிகரிப்பு ஆகியவற்றை அறிவியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் பிக்மி கோட்பாடு நிரூபிக்கப்படவில்லை. வாசிம்பா பற்றிய கதைகள் வரலாற்றிலிருந்து அமானுஷ்யம் வரையிலான மலகாசி மக்களின் கலாச்சார வரலாறு மற்றும் கூட்டு அடையாளத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அங்கமாக அமைகின்றன. தீவு முழுவதும் உள்ள பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை ஊக்குவிக்கின்றன. ஹவாயில் உள்ள மெனெகூன்சு உட்பட வேறு சில ஆசுத்திரோனீசிய மக்களின் கலாச்சாரங்களில் அவை ஒப்புமைகளைக் கொண்டுள்ளன.

வரலாறு தொகு

மடகாசுகரின் முதல் குடியேறிகள் தொகு

நவீன இந்தோனேசியாவின்பிராந்தியத்தைச் சேர்ந்த கடல் ஆய்வாளர்களால் மடகாசுகரை ஆரம்பத்தில் குடியேறியதில் சுற்றியுள்ள உண்மைகள், இந்த காலனித்துவத்தின் துல்லியமான நேரம் மற்றும் தன்மை உட்பட, தொடர்ந்து விவாதம் மற்றும் ஆய்வுக்கு உட்பட்டது. மடகாசுகரில் ஆரம்பகால குடியேற்றத்தின் தொடர்ச்சியான அலைகள் இருந்திருக்கலாம் என்று கோட்பாடு உள்ளது. இந்த கோட்பாட்டின் படி, இவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் அதே பகுதியிலிருந்து தோன்றினர். ஒரே மொழியைப் பேசினர். அதே கலாச்சாரத்தைப் பகிர்ந்து கொண்டனர். இரண்டாவது குடியேற்றம் வந்தபோது, முதல் அலையின் வழித்தோன்றல்கள் தீவில் அரிதாகவே காணப்பட்டனர். பிரபலமான நம்பிக்கையின்படி, வாசிம்பாவிடம் உலோகம் அல்லது நெல் வளர்ப்பு பற்றிய அறிவு இல்லை மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள் எனத்தெரிகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பாண்டு பேசும் குடியேறிகள் தீவுக்கு குடிபெயர்ந்ததும், அவர்களுடன் நாட்டு மாடுகளின் வளர்ப்பின் கலாச்சாரத்தை கொண்டு வந்த்ததும், வாசிம்பா தங்கள் மாடுகளை இறைச்சிக்காக சாப்பிடாமல் வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. பல-அலை குடியேற்றக் கோட்பாடு சரியாக இருந்தால், தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய இரண்டாம்-அலை குடியேற்றவாசிகளின் உள்நாட்டு (முதல்-அலை) மக்கள் மடகாசுகருக்கு வந்தவுடன் சந்தித்திருப்பர். அவர்கள் அங்கு சந்தித்ததாகக் கூறப்படும் வாசிம்பா சமூகங்களின் பழமையான தன்மை பற்றிய கதைகளுக்கு வரலாற்று அடிப்படையை வழங்கும்.[1]

தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் வாய்வழி வரலாறுகள் மலைப்பகுதிகளில் இந்த ஆரம்பகால மக்கள் எவ்வாறு வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான சில அறிகுறிகளை வழங்கியுள்ளன.[2] அந்த பழங்கால வெப்பமண்டல மலைப்பாங்கான காடுகளுக்கு அவர்கள் வந்ததும், வாழைப்பழங்கள், கிழங்குகள், இஞ்சி மற்றும் பிற உணவுப்பொருட்களை பயிரிடுவதற்கான நிலத்தை அழிக்க வாசிம்பா குழு பயிற்சியில் ஈடுபட்ட்டது. அவர்கள் தேன், பழங்கள் மற்றும் சமையல் விதைகளை சேகரித்தும், காடுகளில் வேட்டைகளிலும் ஈடுபட்டனர். அவர்களின் மக்கள் தொகை அதிகரித்ததால், கிராமங்கள் தலைவர்களாலும் பின்னர் மன்னர்களாலும் நிறுவப்பட்டு ஆட்சி செய்யப்பட்டன. உள்ளூர் காளானைப் பயன்படுத்தி ஆட்சியாளர்கள் தலைமுடியை சிவப்பு நிறமாக்கிகொண்டதாகவும் நம்பப்படுகிறது; சிவப்பு நிறத்தை அரசர்களுடன் இணைப்பது மடகாசுகரின் பல பகுதிகளில் இன்றுவரை காணப்படுகிறது.

வாய்வழி வரலாறு அவர்கள் குடியேறியதாக நம்பப்படும் தீவின் சில பகுதிகளுக்கு ஏற்ப வாசிம்பாவை வகைப்படுத்துகிறது.[3] வாசிம்பா இனம் ஆண்ட்ரானோ ஆறுகள் மற்றும் ஏரிகளில் குடியேறியது. மேலும் அவை மத்திய பகுதியில் உள்ள பெட்சிரிரி சமவெளிகளில் உள்ள பள்ளத்தாக்கைச் சுற்றிலும் ஏராளமாக குடியேறியதாக கூறப்படுகிறது. மேற்கு மடகாசுகரில் பெமாரகவின் சுண்ணாம்புக் கரடுகளைச் சுற்றியுள்ள குகைகளில் வசிம்பா வாழ்ந்துள்ளனர். மேலும் பழங்கள் மற்றும் பிற வனப் பொருட்களை பயிரிட்டதாக நம்பப்பட்டது.

வரலாற்று உயர்வு மற்றும் சரிவு தொகு

மலகாசி வாய்வழி வரலாற்றின் முதல் காலம் வாசிம்பா காலம் என்று அழைக்கப்படுகிறது. இது தீவின் ஆரம்ப மக்கள்தொகையான வாசிம்பாவிலிருந்து தொடங்கி, மடகாசுகரின் மத்திய சமவெளி பிராந்தியத்தில் இராணிகள் ஆட்சி செய்த இராச்சியங்களை பெரும்பாலும் நிறுவியது.[4]

பிரபலமான கற்பனையில் தொகு

முக்கியமான வாசிம்பா புள்ளிவிவரங்கள் தொடர்பான மலகாசி வாய்வழி வரலாற்றில் பல புராணங்களும் கதைகளும் உள்ளன. உதாரணமாக, வாய்வழி வரலாறு ராம்போமனா என்ற வாசிம்பா பெண்ணையும், தோம்பன்-தானி (நிலத்தின் எஜமானர்கள்) என அழைக்கப்படும் ராம்போபெசோபி என்ற வாசிம்பா ஆணையும் - அங்கவந்த்ரா பகுதியில் குடியேறிய மடகாசுகரின் ஆரம்பகால மக்கள் என நம்புகின்றனர். இந்த தம்பதியினருக்கு ரங்கோரோமனா மற்றும் சாபிகோசோகி என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் நாட்டு மாடுகளை தீவுக்கு முதன்முதலில் கொண்டுவந்ததாக புராணக்கதை கூறுகிறது.[3] அவர்களின் வம்சாவளியை என்ட்ரெனாவோவோ அல்லது அவரது சகோதரி பெலமனாவிடம் காணலாம். அவர்கள் வாய்வழி வரலாற்றின் படி, மடகாசுகருக்கு வந்த முதல் வாசிம்பா அல்லாத மக்கள் (அதாவது இரண்டாவது அலை குடியேறிகள்). அவர்கள் சிரேந்திரசாகா அருகே ஒரு காட்டில் அடக்கம் செய்யப்படுவதாக நம்பப்படுகிறது. அவர்களின் கல்லறை பெட்சிரரியின் அனைத்து வாசிம்பாவாலும் வணங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, அதற்கு ஈடாக, சிரெண்ட்ரேசாகா மக்கள் மாடுகளைக் கொல்வதை அனுசரிக்கிறார்கள்.

இன்று மடகாசுகரில் உள்ள பிரபலமான நம்பிக்கை, வாசிம்பா மனிதனாக இருந்திருக்க முடியாது என்வும், மாறாக ஆறுகள், கற்பாறைகள் அல்லது பள்ளத்தாக்குகள் போன்ற இயற்கை தளங்களைத் தாக்கும் ஒரு வகையான அசுரன் அல்லது பெரும்பாலும் மோசமான ஆவியாக இருந்திருக்கலாம் என்று நம்ப்பப்படுகிறது. இறந்தவர்களை சதுப்பு நிலங்கள் அல்லது நீரில் மூழ்கடிப்பது என்பவை வாசிம்பாவிடையே வழக்கமாக இருந்தது என்றும் இந்த பகுதிகள் புனிதமானவை என்றும், சில சமயங்களில் யாத்திரை மற்றும் தியாகம் செய்யும் இடங்களாக மாறியது என்றும் வாய்வழி வரலாறு கூறுகிறது.[2] வாசிம்பா பெரும்பாலும் சராசரி மனிதனை விட சிறியவராகவும், மிகவும் வெளிர் அல்லது மிகவும் கருப்பாக இருப்பதாகக் கருதப்படுகிறது. வாசிம்பாவின் மிகவும் கொடூரமான விளக்கங்கள் இயற்கைக்கு மாறான நீளமான முகத்தைப் பற்றி பேசுகின்றன. பெரிய உதடுகள் வெளியே தெரியும் பற்களை மறைக்கின்றன. வசிம்பா தொடர்பான பல நம்பிக்கைகளில், உப்புடன் தொடர்பு கொண்ட எந்தவொரு பொருளையும் அவர்கள் தொட முடியாது என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒரு வாசிம்பா கல்லறை இருப்பதாக நம்பப்படும் பகுதிக்கு பூண்டு அல்லது பன்றி இறைச்சியைக் கொண்டுவருவது தடைசெய்யப்பட்டுள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Vazimba: Mythe ou Realité?" Razafimahazo, S. Revue de l’Océan Indien. Accessed on November 8, 2010.
  2. 2.0 2.1 Kent, Raymond K. Early Kingdoms in Madagascar: 1500–1700. Holt, Rinehart and Winston, 1970.
  3. 3.0 3.1 "Origine Confuse des Vazimba du Betsiriry." Ravalitera, P. Journal Express. Accessed on November 11, 2010.
  4. Bloch, M. From blessing to violence: History and ideology in the circumcision ritual of the Merina in Madagascar. Press Syndicate of the University of Cambridge, 1986.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசிம்பா&oldid=3765953" இலிருந்து மீள்விக்கப்பட்டது