விருந்தோம்பல்

விருந்தோம்பல் என்பது ஒரு விருந்தினர் மற்றும் அவரது புரவலர் ஆகியோருக்கு இடையிலான உறவு அல்லது பொதுவாக, உயிர்களுக்கு ஆதரவளிக்கும் குணத்தைக் குறிப்பது - அதாவது விருந்தாளிகள், வருநர், அந்நியர்கள் ஆகியோரை வரவேற்று அவர்களை விருந்தோம்பி மகிழ்விக்கும் மனமகிழ்விடங்கள், உறுப்பினருக்கான கழகங்கள், அவைகள், ஈர்ப்புகள், பிரத்தியேகமான நிகழ்வுகள் மற்றும் பயணிகள் மற்றும் சுற்றுலாவினருக்கான இதர சேவைகள் ஆகிய அனைத்தையும் இது குறிக்கும்.

தேவையுள்ள யாருக்கும் தாராள மனத்துடன் கவனிப்பையும், காருண்யத்தையும் வழங்குவதையும் விருந்தோம்பல் எனக் கூறலாம்.

விருந்தோம்புதல் என்பதன் பொருள் தொகு

விருந்தோம்புதல் என்பதன் ஆங்கிலச் சொல்லான ஹாஸ்பிட்டாலிட்டி என்பது இலத்தீன் மொழிச் சொல்லான ஹாஸ்பெஸ் என்பதிலிருந்து பெறப்படுகிறது. இச்சொல்லோ, 'அதிகாரம் கொள்ளல்' எனப் பொருள்படுவதான ஹாஸ்டிஸ் எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. ஹோஸ்ட் என்பதன் பொருளை சொற்சார்ந்து அப்படியே உரைப்பதாயின் "அந்நியர்களின் பெருமகன்" எனப் பொருளாகும் ஹோஸ்டியர் என்னும் சொல்லைக் கூறலாம்.[1] இதற்கு ஈடுகட்டுவது அல்லது இழப்பைச் சரிகட்டுவது என்பது பொருளாகும்.

ஹோமரின் காலங்களில் கிரேக்க மதக் கடவுளரின் தலைவராக இருந்த ஜீயஸ் என்னும் கடவுளின் பொறுப்பில் விருந்தோம்பல் இருந்ததாகக் கூறுவர். ஜீயஸ் கடவுளை ஜெனோஸ் ஜீயஸ் ('ஜெனோஸ்' என்பதன் பொருள் அந்நியன்) என்றும் கூறுவதுண்டு. விருந்தோம்பலே தலையாய பணி எனும் மெய்ம்மையை வலியுறுத்துவதாக இது அமைந்தது. கிரேக்கத்தில் ஒரு வீட்டுக்கு வெளியே சென்று கொண்டிருக்கும் அந்நியர் ஒருவரை அவ்வீட்டில் வசிப்பவர்கள் இல்லத்தினுள் வருமாறு அழைப்பு விடுப்பர். வீட்டின் தலைவரான புரவலர் அந்த அந்நியரின் பாதங்களைக் கழுவி, உணவு மற்றும் திராட்சை ரசத்தை அளித்து அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகே அவரது பெயரைக் கூடக் கேட்பார்.

புனித விருந்தோம்பல் என்னும் கிரேக்கக் கருத்தாக்கத்தினை தெலிமச்சஸ் மற்றும் நெஸ்டார் ஆகியோரின் கதை சித்தரிக்கிறது. தெலிமச்சஸ் நெஸ்டாரைக் காண வருகையில்,நெஸ்டார் தன்னிடம் வந்திருக்கும் விருந்தாளி தனது பழைய தோழன் ஒடிஸ்ஸியஸின் மகன் என்பதை அறியவில்லை. இருப்பினும், தெலிமச்சஸை வரவேற்று, பிரம்மாண்டமான விருந்து ஒன்றை அளித்து அதன் மூலம் ஹோஸ்டிஸ் என்னும் அந்நிய விருந்தாளி மற்றும் ஹோஸ்டியர் என்னும் சமதையான புரவலர் ஆகிய இருவருக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தி மற்றும் இவை இரண்டும் இணைகையில் விருந்தோம்பல் என்னும் கருத்துரு எவ்வாறு மிகச் சிறப்பாக வெளிப்படும் என்பதையும் தெரியப்படுத்துகிறார்.

பின்னர், நெஸ்டாரின் மகன்களில் ஒருவர் தெலிமச்சஸின் படுக்கை அருகிலேயே உறங்கி அவருக்குத் தீங்கு ஏதும் நேராது காவல் இருந்தார். மேலும் தெலிமச்சஸ் பைலோஸிலிருந்து நில வழியாக ஸ்பார்ட்டாவிற்கு விரைந்து செல்வதற்காக நெஸ்டார் அவருக்கு ஒரு இரதமும் குதிரைகளும் வழங்கித் தனது மகன் பிசிஸ்டிராஸ் என்பவனையே அதற்கு சாரதியாகவும் அனுப்பினார். பண்டைய கிரேக்கப் பண்புகளான பாதுகாப்பு அளித்தல் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை இவை மிக அருமையாகச் சித்தரிக்கின்றன.

மேற்கூறிய கதையின் அடிப்படையில் அதன் தற்போதைய பொருளானது, ஒரு புரவலர் தன்னை அணுகும் ஒரு அந்நியருக்குப் பாதுகாப்பும் கவனிப்பும் அளித்து, விருந்தோம்பலின் இறுதியில் அவர் தனது அடுத்த கட்டப் பயண இலக்கை அடைவதற்கு உதவுவதைக் குறிப்பதாக அமைகிறது.

சமகாலத்திய பயன்பாடு தொகு

சமகால மேற்கத்திய உலகில், விருந்தோம்பல் என்பது இன்னமும் பாதுகாப்பு மற்றும் உயிர் காத்தல் ஆகியவை தொடர்பானவையாக இல்லாது, மாறாக, நடத்தை முறைமைகள் மற்றும் கேளிக்கை ஆகியன தொடர்பாகவே உள்ளன. இருப்பினும், விருந்தாளிகளை மதிப்பது, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, அவர்களைத் தமக்கு சமதையாக நடத்துவது போன்றவற்றை இன்னமும் அது ஈடுபடுத்துகிறது. அந்நியர்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக தமது நண்பர்கள் அல்லது குழுவில் உள்ளோர் ஆகியோருக்கு எந்த அளவு விருந்தோம்பல் காட்ட வேண்டும் என்பதில் கலாசாரம் மற்றும் துணைக் கலாசாரங்களுக்கு இடையில் வேறுபாடுகள் உள்ளன.

விருந்தோம்பல் சேவைத் தொழிற்துறை என்பது உணவகங்கள், சூதாட்டக் களங்கள், சுற்றுலா விடுதிகள் ஆகியவற்றை உட்படுத்தும். இவை வெளியாட்களுக்கு வசதிகள் மற்றும் வழி நடத்துதல்கள் ஆகியவற்றை வணிக உறவின் ஒரு பகுதியாக அளிக்கின்றன. ஹாஸ்பிடல், ஹாஸ்பைஸ் மற்றும் ஹாஸ்டல் என்னும் சொற்கள் அனைத்துமே விருந்தோம்பல் எனப் பொருள்படுவதான ஹாஸ்பிடாலிட்டி என்னும் சொல்லினின்றும் பெறப்பட்டவையே. இந்த நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் கவனிப்பு அளிப்பதை இன்னும் கைக்கொண்டுள்ளன.

விருந்தோம்பலின் இத்தகைய பயன்பாட்டை ஆய்வதே விருந்தோம்பல் நெறிமுறைகள் என்பதாகும்.

மேற்கத்தியப் பகுதிகளில், ஏதன்ஸ் மற்றும் ஜெருசேலம் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர் பூசல்களின் பின்னணியில் முன்னோக்கான மாறுதலுக்கு உட்சென்றதாக இரண்டு கட்டங்களைக் கூறலாம்: ஒருவர் தனிப்பட்ட முறையில் தமது கடப்பாட்டினை உணர்ந்து அளிக்கும் விருந்தோம்பல் மற்றும் நிறுவனங்கள் "அதிகாரபூர்வமாக" ஆனால், அநாமதேயமாக அளிக்கும் சமூக சேவைகள். இதற்கு ஏழைகள், அனாதைகள், நோயாளிகள், குற்றவாளிகள் போன்ற "அந்நியர்களுக்கு" இவை பிரத்தியேகமான இடங்களில் அளிக்கும் உதவிகளை உதாரணமாகக் குறிப்பிடலாம். இத்தகைய நிறுவனமயமான விருந்தோம்பலே மத்தியக் காலங்களிலிருந்து மறுமலர்ச்சிக் கால மாற்றத்துடன் இணைவதாக இருக்கலாம். (இவான் இல்லிச் தி ரிவர்ஸ் ஆஃப் தி ஃப்யூச்சர் - (Ivan Illich, The Rivers North of the Future) விருந்தோம்பலுக்கு இது ஓர் எடுத்துக் காட்டு: "ஒரு நல்ல தலையணையை உங்களுக்காகக் கொண்டு வருகிறேன். அது நீங்கள் மிகவும் வசதியாக உணர உதவும்." விருந்தாளியை உபசரிப்பது என்பதைக் காட்டுவது இதுவே.

உலகெங்கும் விருந்தோம்பற் பண்பு தொகு

விவிலிய மற்றும் மத்திய கிழக்கில் தொகு

 
தேவதைகளை விருந்தோம்பும் ஆபிரகாம்.

மத்திய கிழக்குக் கலாசாரத்தில், தம்மிடையே வாழும் அந்நியர்கள் மற்றும் வெளிநாட்டிரை கவனித்துக் கொள்வதானது ஒரு கலாசார விதிமுறையாகவே கருதப்பட்டது. பல விவிலிய ஆணைகளிலும் உதாரணங்களிலும் இத்தகைய விதிமுறைகள் வெளியாகின்றன.[1]

இதன் உச்சமான உதாரணம் விவிலியத்தின் ஆதி ஆகமத்தில் காணப்படுகிறது. தேவதைகளின் ஒரு குழுவினை லோத் விருந்தோம்புகிறார். (அச்சமயம் அவர்கள் மனிதர்கள் என்றே அவர் நினைத்திருக்கிறார்). கும்பல் ஒன்று அவர்களை வன்புணர்ச்சி செய்ய முயலும்போது, அவர்களுக்குப் பதிலாகத் தமது மகளிரை எடுத்துக் கொள்ளுமாறு அவர் வேண்டுகிறார். "இவர்களை ஒன்றும் செய்யாதீர்கள். அவர்கள் பாதுகாப்பு வேண்டி என் கூரையின் கீழ் வந்திருக்கின்றனர்." என அவர் கூறுகிறார். (ஆதி ஆகமம் 19:8, என்ஐவி)

விருந்தாளி மற்றும் புரவலர் ஆகிய இருவரின் கடப்பாடுகளுமே கண்டிப்பானவை. ஒரே கூரையின் கீழ் உப்பைத் தின்பதன் மூலம் இந்தப் பிணைப்பு உருவாகிறது. ஓர் அராபியப் புனைவின்படி, ஒரு வீட்டில் சீனி என எண்ணி உப்பைத் தின்று விட்ட திருடன் ஒருவன், அது உப்பு என்று அறிந்ததும் தான் திருடிய அனைத்தையும் அங்கேயே விட்டு விட்டுச் செல்கிறான்.

பண்டைய உலகு தொகு

பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களுக்கு, விருந்தோம்பல் என்பது ஒரு தெய்வீக நிலையாக இருந்தது. தனது விருந்தாளிகளின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டனவா என்று உறுதி செய்து கொள்வது ஒரு புரவலனின் கடப்பாடாக இருந்தது. பண்டைய கிரேக்கச் சொல்லான எக்ஸெனியா (இதுவே இறைவன் இதில் ஈடுபடுகையில் தியோக்ஸெனியா என்னும் சொல்லானது) இவ்வாறு விருந்தாளி-நட்புச் சடங்கு உறவைச் சுட்டுவதாகும்.

பண்டைய உலகில் விருந்தோம்பல் எவ்வாறு மிகப் பெரும் இடம் பெற்றிருந்தது என்பதை பாசிஸ் மற்றும் ஃபிலோமின் கதை விவரிக்கிறது. இக்கதையில் பழங்காலத்தியக் கடவுளரான ஜீயஸ் மற்றும் ஹெர்மெஸ் ஆகியோர் ஃபிர்ஜியா நகரில் எளிய உழவர் போல வேடம் புனைந்து வருகின்றனர். இரவுக்கான உணவும் உறைவிடமும் தேடி அவர்கள் அலைகையில், பெரும்பாலும் மூடிய கதவுகளையே சந்திக்கின்றனர். இறுதியாக பாசிஸ் மற்றும் ஃபிலோமினின் இல்லத்தை அடைகின்றனர். தாங்கள் ஏழ்மையில் வாடியபோதும், இத்தம்பதி சிறந்த முறையில் விருந்தோம்புகின்றனர். தங்களிடம் இருக்கும் மிகக் குறைவான உணவை விருந்தினருக்கு அவர்கள் அளிக்கின்றனர். தங்களது விருந்தினர் உண்மையில் கடவுளர் என அறிகையில் தங்களது வீட்டைக் காக்கும் ஒரே வாத்தையும் வெட்டிப் படைப்பதற்கு முன்வருகின்றனர். இதற்கு வெகுமதியாக கடவுளர் அவர்களுக்கு வரம் ஒன்றை அளிக்கின்றனர். மேலும், விருந்தோம்பும் பண்பற்ற இதர நகர மக்களை வெள்ளத்தில் அமிழ்ந்து போகவிட்டு, இத்தம்பதியை மட்டும் காப்பாற்றுகின்றனர்.

செல்ட்டிக் நாகரிகங்களில் விருந்தோம்புதல் தொகு

விருந்தோம்பல் என்னும் பண்பு, குறிப்பாக பாதுகாப்பு அளிப்பது என்பதானது, செல்ட்டிக் நாகரிகத்தைச் சார்ந்த சமூகங்களில் மிகுந்த அளவில் மதிப்புற்றிருந்தது.

அடைக்கலம் கேட்டு வரும் ஒருவருக்கு புரவலரானவர் உண்டியும் உறைவிடமும் மட்டும் அன்றி தமது கவனிப்பில் இருக்கையில் அவருக்குத் தீங்கு ஏதும் நேராத வண்ணம் பாதுகாக்கவும் வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு யதார்த்தமான வாழ்க்கையில் உதாரணம் ஒன்றை வரலாறு அளிக்கிறது. அது, 17ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஸ்காட்டிஷ் மெக்கிரெகோர் குலம் பற்றியதாகும். இலாமோண்ட் என்னும் குலத் தலைவர் கிளென்ஸ்டிரேவில் வாழும் மெக்கிராகோர் தலைவரின் இல்லத்தை அடைந்து தாம் எதிரிகளிடம் இருந்து தப்பித்து வருவதாகக் கூறி அடைக்கலம் கோருகிறார். தமது சகோதரத் தலைவரை கேள்விகள் ஏதும் கேட்காமலேயே மெக்கிரோகர் வரவேற்கிறார். பின்னர் இரவுப் பொழுதில், லாமோண்ட் தலைவரைத் தேடி வரும் மெக்கிரகோர் குல மக்கள், மெக்கிரகோரிடம், உண்மையில், அவரது மகனையே லாமோண்ட் தலைவர் கொன்று விட்டதாக உரைக்கின்றனர். விருந்தோம்பலின் புனிதக் கடமையின்பாற்பட்டு, மெக்கிரோகர் தலைவர் லாமோண்ட்டைத் தனது குல மக்களிடம் ஒப்படைக்க ம்றுப்பது மட்டும் அல்லாது, மறு நாள் காலை, அவரை அவரது பூர்வீக இடத்திற்குத் தாமே வழித்துணையாக உடன் சென்று அனுப்புவிக்கிறார். பின்னாளில் மெக்கிரோக்கர்கள் நாடுகடத்தப்படுகையில், அவர்களில் பலருக்கு அடைக்கலம் அளித்து லாமோண்டினர் இந்த நன்றிக்கடனை திரும்பச் செலுத்துகின்றனர்.[2]

இந்தியாவில் விருந்தோம்புதல் தொகு

உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று. தொன்மையான ஏனைய கலாசாரங்களைப் போலவே, விருந்தோம்பலையும் உள்ளிட்ட, பல அருமையன புனைவுகளை முறையில் இந்தியக் கலாசாரமும் கொண்டுள்ளது. மூடன் ஒருவன் அழையாத விருந்தாளியுடன் தனது சிறு உண்டியை மறுபேச்சின்றிப் பகிர்ந்து கொள்கையில், தன்னிடம் வந்த விருந்தாளி மாறுவேடம் பூண்ட இறைவன் என்பதைக் கண்டு கொள்கிறான். அவனது தாராள மனதிற்காகக் கடவுள் அவனுக்கு மிகுந்த செல்வமளிக்கிறார். பசியுடன் இருக்கும் எவரும் உண்பதற்காக பெண் ஒருத்தி தன்னிடம் இருக்கும் கிச்சடி அனைத்தையும் சமைத்து அளிக்கிறாள்... ஒரு நாள் அவளிடம் இருக்கும் உணவுப் பண்டங்கள் அனைத்தும் தீர்ந்து விடவே, இறுதியாக, பசியுடன் வரும் ஒருவனுக்கு தன் உணவையே அவள் அளிக்கையில், இறைவனிடம் இருந்து என்றும் குன்றாது நிறைந்தே இருக்கும் கிச்சடி கொண்ட பாத்திரம் ஒன்றைப் பெறுகிறாள். குழந்தைகளாகத் தாம் இருந்த காலம் தொட்டே இத்தகைய கதைகளைக் கேட்டு வளரும் பெரும்பாலான இந்தியர்கள், விருந்தாளியே ஆண்டவன் எனப் பொருள்படும் "அதிதி தேவோ பவ:" என்னும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதிலிருந்தே இல்லத்திலும், சமூக நிகழ்வுகளிலும் விருந்தாளிகளின் பால் அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளும் இந்திய அணுகு முறையானது உருவானது.

இந்தியா என்பதன் பொருள் 1947ஆம் ஆண்டின் பிரிவினைக்கு முந்தைய நவீன இந்தியா என்பதல்ல; இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டும் ஒரே நாடாகத்தான் இருந்தன. எனவே, இந்தியக் கலாசாரம் எனக் கூறுகையில் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையுமே குறிக்கிறது.

கலாசார மதிப்பு அல்லது விதிமுறை தொகு

சமூக ரீதியான தோற்றப்பாடாக அல்லது நிகழ்வாக விருந்தோம்பல் உள்ளமையைக் குறித்து அல்லது ஒரு கலாசார விதி அல்லது மதிப்பு என்பதாக அது உள்ளமையைக் குறித்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வரைந்துள்ளனர். (பார்க்க: குறிப்புதவிகளில், விருந்தோம்பல் நெறிமுறைகள்)

மாறாத நிலை கொண்டு ஒரு ஒரே தன்மையிலான விருந்தோம்பலைச் சில பகுதிகள் வெளிப்படுத்துகின்றன.

இவற்றிற்கான எடுத்துக்காட்டுகள்:

  • மின்னோஸ்டா நகரின் உபசரிப்பு
  • தெற்கத்தியரின் விருந்தோம்பல்

விருந்தோம்பல் நெறி முறைகள் தொகு

"விருந்தோம்பல் நெறிமுறைகள்" என்னும் சொற்றொடரானது வேறுபட்ட ஆயினும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரு கல்விசார் துறைகளைக் குறிப்பதாக அமைகிறது:

  1. விருந்தோம்பல் உறவுகள் மற்றும் நடைமுறைகளில் ஒழுக்கம் சார் கடப்பாடுகள் தொடர்பான தத்துவ இயல் ஆய்வு.
  2. வர்த்த ரீதியான விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் தொழிற்துறைகளின் வணிக நெறிமுறைகளை குவிமையப்படுத்தும் பிரிவு.

நெறிமுறைகள் என்பன செய்யப்பட்டவை எவை என்பதற்கும் அப்பாற்சென்று எவை செய்யப்பட வேண்டும் என உரைப்பவை. விருந்தோம்பல் சார்ந்த விடயங்களில் எவை செய்யப்பட வேண்டும் என உரைப்பவை விருந்தோம்பல் நெறிமுறைகள். வரலாற்றினூடே, பல்வேறு கலாசாரங்கள் மற்றும் மரபுகள் ஆகியவற்றில் விருந்தோம்பல் நடைமுறைகள், செயற்பாடுகள், மற்றும் உறவுகள் ஆகியவற்றின் நுண்ணிய பகுப்பாய்வின் மூலமாக விருந்தோம்பற் கோட்பாடுகள் மற்றும் விதிகளும் பெறப்படுகின்றன. இறுதியாக விருந்தோம்பற் கோட்பாடுகள், வர்த்தக மற்றும் வர்த்தகமல்லாத நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

நடத்தையின் ஒரு பொது விதியாக, வரலாறு எங்கிலும், விருந்தோம்பல் என்பதனை, ஒரு சட்டமாக, ஒரு நெறிமுறையாக, ஒரு கொள்கையாக, கடமையாக, குறியீடாக, பண்பாகவே கருதப்பட்டு வந்துள்ளது. விருந்தாளிகள், புரவலர்கள், குடிமக்கள் மற்றும் அந்நியர்கள் ஆகியோருக்கு இடையிலான தெளிவற்ற உறவு நிலைகளைப் புரிந்து கொள்ளும் விதமாக இவை உருவாயின. பல்வேறு கலாசாரங்களிலும் பண்டைய காலம் தொட்டே பரவலாக இருந்து வந்திருப்பினும், விருந்தோம்பல் என்னும் கருத்துரு ஒழுக்கத் தத்துவ இயலாளர்களின் கவனத்தை மிகக் குறைந்த அளவே பெற்று வந்துள்ளது. நல்லது, தீயது, முறையானது மற்றும் தவறானது ஆகியவை தொடர்பான இதர நெறிக் கோட்பாடுகளிலேயே அவர்கள் தங்களது கவனத்தைக் குவிமையப்படுத்தி வந்துள்ளனர்.

இருப்பினும், தவிர்க்க இயலாத ஒழுக்கம்சார் அதிகாரமாக அல்லது ஒரு நெறிமுறைக் கண்ணோட்டமாக, ஏனைய பல நெறிமுறை நடத்தைகளுக்கும் இது முற்செல்வதாக அமைந்திருந்தது. பண்டைய மத்திய கிழக்குப் பகுதிகளிலும், கிரேக்கம், ரோமன் கலாசாரங்களிலும் விருந்தோம்பல் நெறிமுறை என்பது புரவலர் மற்றும் விருந்தாளி ஆகிய இருவரிடம் இருந்தும் குறிப்பிட்ட நடத்தை முறைகளை எதிர்பார்ப்பதாக இருந்தன. ஓர் எடுத்துக் காட்டு: தேவைப்பட்ட எவருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிப்பதை வீரப் பெருமகனார் பேராண்மைப் பண்பு என விளங்குவதாகக் கொண்டனர்.

தற்காலத்திய வர்த்தக விருந்தோம்பற் தொழிற் துறையிலும் இத்தகைய பொதுத் தர நிலைப்படுத்திய நடத்தைகள் நிலவி வருகின்றன. விருந்தோம்பல் என்பதன் பண்டைய கருத்துருக்களும் நடைமுறைகளும் இன்றைய நடைமுறை மற்றும் பொதுத் தரநிலைகளை அறிவிப்பதாக உள்ளன.

நடைமுறையில் உள்ள விருந்தோம்புதல் நெறிமுறைகள் தொகு

வணிக விருந்தோம்பல் அமைப்பில் நெறிமுறைகள் செயல்முறையாக்கம் செய்த நெறிமுறைகள் என்பது நெறிமுறை சார் கோட்பாடுகள் மற்றும் தீர்ப்புகள் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் தமது பயன்பாட்டில் அமைக்கும் முறைமை சார்ந்த கிளையாகும்.

பயன்பாட்டு நெறிமுறை என்பதிலும் பல கிளைகள் உள்ளன: வணிக நெறிமுறைகள், தொழில் நெறிமுறைகள், மருத்துவ நெறிமுறைகள், கல்விசார் நெறிமுறைகள், சுற்றுச் சூழல் நெறிமுறைகள் என்பன போன்று பல உள்ளன.

விருந்தோம்பல் நெறிமுறை என்பது இத்தகைய பயன்பாட்டு நெறிமுறையின் ஒரு பிரிவாகும். நடைமுறையில், பயன்பாட்டு நெறிமுறைகளின் வேறு பல பிரிவுகளையும் இது இணைத்துக் கொள்கிறது. வர்த்தக நெறிமுறைகள், சுற்றுச் சூழல் நெறிமுறைகள், தொழில்முறை நெறிமுறைகள் மேலும் பலவற்றையும் எடுத்துக்காட்டாகக் கூறலாம். உதாரணமாக, பகுதி சார்ந்த விருந்தோம்பல் துறை ஒன்று சிறப்பாகச் செயல்படுகையில், நெறிமுறை சார்ந்த குழப்பங்கள் பல உருவாகின்றன: தொழில் முறை நடவடிக்கைளின் பலனாக சுற்றுச் சூழல் என்னவாகும்? புரவலர் சமூகத்தின் நிலை என்னவாகும்? பகுதி சார்ந்த பொருளாதரத்தின் நிலை என்னவாகும்? தங்களது பகுதி சார்ந்த சமூகத்தின் மீது குடிமக்களின் மனப்போக்கு மற்றும் வெளி நபர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் விருந்தாளிகளின் மீதான அவர்களது மனப்போக்கு ஆகியவை எவ்வாறு இருக்கும்? செயற்பாட்டு நெறிமுறையாக உள்ள விருந்தோம்பல் நெறிமுறைகள் இத்தகைய வினாக்களைத் தொடுக்கலாம்.

விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டும் இணைந்து உலகின் மிகப் பெரும் தொழில் துறையினை உருவாக்குவதால், சிறப்பான மற்றும் மோசமான நடத்தை ஆகிய இரண்டிற்குமே வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. இதைப் போல விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறை செயற்பாட்டாளர்கள் முறையான அல்லது தவறான செயல் முறைகளில் ஈடுபடுவதற்கும் அநேக வாய்ப்புகள் உள்ளன. பணியாளர் கையேடுகள், (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ) பொதுத்தர நிலைப்படுத்தப்பட்ட தொழில் முறை நடத்தைக் கோட்பாடுகள் போன்று பல வழிகள் மூலமாக இத்தொழில்களில் நெறிமுறைகள் வழி நடத்தப்படலாம்.

உலக சுற்றுலா நிறுவனம் (World Tourism Organization) இத்தொழிலுக்கான நெறிமுறைக் கோட்பாடு ஒன்றினை முன்வைத்துள்ளது. இருப்பினும், உலகளாவியதான செல்லுமை கொண்டதாக விருந்தோம்பல் துறைக்கான கோட்பாடுகள் ஏதும் தற்போது இல்லை. அண்மையில், வர்த்தகப் பின்னணியில் நெறிமுறைகள் பற்றி பல கல்விசார் புத்தகங்கள் பிரசுரமாகி உள்ளன. இவையே விருந்தோம்பல் தொடர்பான படிப்புகளில் பயன்படுகின்றன.

குறிப்புதவிகள் தொகு

  1. (Exodus 22:21, NIV)
  2. Charles MacKinnon, Scottish Highlanders (1984, Barnes & Noble Books); page 76

மேலும் படிக்க தொகு

  • Christine Jaszay. 2006). Ethical Decision-Making in the Hospitality Industry
  • Karen Lieberman & Bruce Nissen. 2006). Ethics in the Hospitality And Tourism Industry
  • Rosaleen Duffy and Mick Smith. The Ethics of Tourism Development
  • Conrad Lashley and Alison Morrison. In Search of Hospitality
  • Hospitality: A Social Lens by Conrad Lashley and Alison Morrison
  • The Great Good Place by Ray Oldenburg
  • Customer Service and the Luxury Guest by Paul Ruffino
  • Fustel De Coulanges. The Ancient City: Religion, Laws, and Institutions of Greece and Rome
  • Bolchazy. Hospitality in Antiquity: Livy's Concept of Its Humanizing Force
  • Jacques Derrida. (2000). Of Hospitality. Trans. Rachel Bowlby. Stanford: Stanford University Press.
  • Steve Reece. 1993) The Stranger's Welcome: Oral Theory and the Aesthetics of the Homeric Hospitality Scene. Ann Arbor: The University of Michigan Press.
  • Mireille Rosello. (2001). Postcolonial Hospitality. The Immigrant as Guest. Standford, CA: Stanford University Press.
  • Clifford J. Routes. (1999). Travel and Translation in the Late Twentieth Century. Cambridge, MA: Harvard University Press.
  • Immanuel Velikovsky. (1982). Mankind in Amnesia. Garden City, New York: Doubleday.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விருந்தோம்பல்&oldid=3650611" இலிருந்து மீள்விக்கப்பட்டது