விவிலிய சிலுவைப் பாதை

விவிலிய சிலுவைப் பாதை (Scriptural Way of the Cross) என்பது இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வை, முற்றிலுமாக விவிலியத் தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தியானித்து இறைவேண்டல் செய்யும் கிறித்தவ பக்தி முயற்சி ஆகும். இது மரபு வழி வருகின்ற சிலுவைப் பாதையிலிருந்து சற்றே மாறுபட்டதாகும்[1].

உரோமை கொலொசேயத்தில் சிலுவைப் பாதை இறைவேண்டல் நிகழ்கிறது.

மரபு வழி சிலுவைப் பாதையின் 14 நிலைகள் தொகு

சிலுவையைச் சுமந்துசென்ற இயேசுவின் அடியொற்றி நடந்துசென்று, அவருடைய துன்பங்களில் பங்கேற்று, தியானிப்பதைப் பதினான்கு நிலைகளில் செய்வது மரபு. ஒவ்வொரு நிலையும் ஒரு குறிப்பிட்ட காட்சியை உருவகப்படுத்தும். அக்காட்சியில் வருகின்ற ஆள்கள் இடங்கள் நிகழ்வுகள் ஆகியவற்றை மனத்தில் கொண்டு, உணர்வில் ஏற்று, இயேசுவோடு மக்கள் தம்மை ஒன்றுபடுத்துவர். அந்நிலைகள் பின்வருமாறு:

  1. இயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்படுதல்
  2. இயேசுவின்மீது சிலுவை சுமத்தப்படுதல்
  3. இயேசு முதல் முறை கீழே விழுதல்
  4. இயேசு தம் தாய் மரியாவைச் சந்தித்தல்
  5. சிரேன் ஊர் சீமோன் என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவுதல்
  6. வெரோணிக்கா என்னும் பெண்மணி இயேசுவின் திருமுகத்தைத் துணியால் துடைத்தல்
  7. இயேசு இரண்டாம் முறை கீழே விழுதல்
  8. இயேசு எருசலேம் நகரப் பெண்களைச் சந்தித்தல்
  9. இயேசு மூன்றாம் முறை கீழே விழுதல்
  10. இயேசுவின் ஆடைகளை உரியப்படுதல்
  11. இயேசு சிலுவையில் அறையப்படுதல்
  12. இயேசு சிலுவையில் உயிர் துறத்தல்
  13. இயேசுவின் திருவுடல் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு மரியாவின் மடியில் வளர்த்தப்படுதல்
  14. இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுதல்

மேற்கூறிய பதினான்கு நிலைகளோடு பதினைந்தாம் நிலையாக "இயேசு கல்லறையினின்று உயிர்பெற்றெழுதல்" என்பதையும் இணைப்பது இன்றைய வழக்கம் ஆகும்.

மேலே தரப்பட்ட 14 நிலைகளுள் எட்டு நிலைகளுக்கு மட்டுமே உறுதியான விவிலிய அடிப்படை உள்ளது. அவை: நிலைகள் 1, 2, 5, 8, 10, 11, 12, 14 ஆகியவையாம். எஞ்சிய ஆறு நிலைகளுள் "வெரோணிக்கா என்னும் பெண்மணி இயேசுவின் திருமுகத்தைத் துணியால் துடைத்தல்" என்னும் 6ஆம் நிலை நற்செய்தி நூல்களில் இல்லை. நடுக்கால சிலுவைப் பாதைகளில்தான் அது காணப்படுகிறது.

இயேசு மும்முறை கீழே விழுந்தார் என்பதற்கும் நற்செய்தியில் தகவல் இல்லை (நிலைகள் 3, 6, 9). சிலுவை சுமந்து சென்றபோது இயேசு தம் அன்னை மரியாவைச் சந்தித்தார் (நிலை 4) என்னும் தகவலும் நற்செய்தியில் காணப்படவில்லை. இறுதியாக, "இயேசுவின் திருவுடல் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு மரியாவின் மடியில் வளர்த்தப்பட்டது" என்னும் செய்தியையும் நற்செய்தியாளர்கள் குறிப்பிடவில்லை. மாறாக, அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவைக் கல்லறையில் அடக்கிய செய்தி உள்ளது.

இதனால், மரபு வழி வருகின்ற சிலுவைப் பாதையில் கற்பனை நிகழ்வுகள் புகுத்தப்பட்டன எனப் பொருளாகாது என்றும், பொதுமக்களின் பக்தி முயற்சியாக வளர்ந்த சிலுவைப் பாதையில், இயேசு சிலுவை சுமந்து சென்றபோது என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை எண்ணி உள்ளத்தில் சிந்தித்து இறைவேண்டல் செய்திட வெவ்வேறு நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டன என்றும் அறிஞர் கூறுகின்றனர்.

இயேசு துன்பங்கள் அனுபவித்து சிலுவையில் இறந்த நிகழ்வோடு தொடர்புடைய தகவல்கள் வெளிப்படையாக நற்செய்தி நூல்களில் உள்ளனவா என்று ஆய்ந்து அவற்றை மட்டுமே சிலுவைப் பாதையின் நிலைகளாகக் கருதுவது நல்லது என்னும் எண்ணத்தில் பலர் "விவிலிய சிலுவைப் பாதை" உருவாக்கலாயினர். இத்தகைய விவிலிய சிலுவைப் பாதை ஒன்றினைக் காலஞ்சென்ற திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் (அருள் சின்னப்பர்) உருவாக்கினார். அதை 1991ஆம் ஆண்டு பெரிய வெள்ளியன்று அவரே முன்னின்று உரோமை கொலொசேயத்தில் பயன்படுத்தி வழிபாடு நடத்தினார்.

அந்த விவிலிய சிலுவைப் பாதையை எல்லாக் கிறித்தவ மக்களும் பொது வழிபாட்டின்போது பயன்படுத்துவது நலம் என்று கூறி, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இசைவு வழங்கினார்.

விவிலிய சிலுவைப் பாதையின் 14 நிலைகள் தொகு

இவ்வாறு திருத்தந்தையரின் ஆதரவையும் இசைவையும் பெற்ற, விவிலிய அடிப்படையிலான சிலுவைப் பாதையின் 14 நிலைகள் கீழ்வருவன:[2]

  1. இயேசு கெத்சமனி தோட்டத்தில் இறைவேண்டல் செய்தல்
  2. இயேசு யூதாசினால் காட்டிக்கொடுக்கப்பட்டு, கைதுசெய்யப்படுதல்
  3. இயேசு யூதர்களின் தலைமைச் சங்கத்தால் கண்டனம் செய்யப்படுதல்
  4. இயேசுவைப் பேதுரு மறுதலித்தல்
  5. இயேசுவைப் பிலாத்து சாவுக்குத் தீர்ப்பிடுதல்
  6. இயேசு கசைகளால் அடிக்கப்பட்டு, தலையில் முள்முடி சூட்டப்படுதல்
  7. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லுதல்
  8. இயேசுவின் சிலுவையைச் சுமக்க சீமோன் உதவிசெய்தல்
  9. இயேசு எருசலேம் நகரப் பெண்களைச் சந்தித்தல்
  10. இயேசு சிலுவையில் அறையப்படுதல்
  11. இயேசுவோடு தொங்கிய மனம் மாறிய குற்றவாளிக்கு அவர் பேரின்ப வீட்டை வாக்களித்தல்
  12. இயேசு மரியாவையும் யோவானையும் ஒருவரொருவரிடம் ஒப்படைத்தல்
  13. இயேசு சிலுவையில் இறத்தல்
  14. இயேசு கல்லறையில் அடக்கப்படுதல்

இந்த 14 நிலைகளோடு "இயேசு கல்லறையிலிருந்து உயிர்பெற்றெழுதல்" என்பதையும் பலர் சேர்த்துக் கொள்வார்கள். இவ்வாறு விவிலிய அடிப்படையிலான நிகழ்வுகளை இயேசுவின் துன்பங்கள், சாவு, ஆகிவற்றோடு தொடர்புபடுத்தி, இயேசு வழங்குகின்ற புது வாழ்வில் பங்குபெற கிறித்தவ மக்கள் சிலுவைப் பாதை என்னும் வழிபாட்டு நிகழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்.

விவிலிய சிலுவைப் பாதையின் பாடங்கள் தொகு

மேலே தரப்பட்டுள்ள 14 நிலைகளுக்கும் அடிப்படையான விவிலிய பாடங்கள் கீழே தரப்படுகின்றன. ஒவ்வொரு நிலையைத் தொடங்கும் போதும் வழக்கம்போல, "இயேசுவே, நாங்கள் உம்மை வழிபட்டு வாழ்த்துகின்றோம்" என்று நடத்துநர் கூறுவார். அதற்கு மக்கள் எல்லாரும், "ஏனென்றால் உமது திருச்சிலுவையால் நீர் உலகத்தை மீட்டுக் காப்பாற்றினீர்" என்று பதில் கூறுவார்கள். அதன் பின் விவிலிய பாடம் வாசிக்கப்படும். எல்லாரும் அப்பாடத்தின் அடிப்படையில் தியானம் செய்வார்கள்.

முதல் நிலை: இயேசு கெத்சமனி தோட்டத்தில் இறைவேண்டல் செய்தல் தொகு

இரண்டாம் நிலை: இயேசு யூதாசினால் காட்டிக்கொடுக்கப்பட்டு, கைதுசெய்யப்படுதல் தொகு

மூன்றாம் நிலை: இயேசு யூதர்களின் தலைமைச் சங்கத்தால் கண்டனம் செய்யப்படுதல் தொகு

நான்காம் நிலை: இயேசுவைப் பேதுரு மறுதலித்தல் தொகு

ஐந்தாம் நிலை: இயேசுவைப் பிலாத்து சாவுக்குத் தீர்ப்பிடுதல் தொகு

ஆறாம் நிலை: இயேசு கசைகளால் அடிக்கப்பட்டு, தலையில் முள்முடி சூட்டப்படுதல் தொகு

ஏழாம் நிலை: இயேசு சிலுவையைச் சுமந்து செல்லுதல் தொகு

எட்டாம் நிலை: இயேசுவின் சிலுவையைச் சுமக்க சீமோன் உதவிசெய்தல் தொகு

ஒன்பதாம் நிலை: இயேசு எருசலேம் நகரப் பெண்களைச் சந்தித்தல் தொகு

பத்தாம் நிலை: இயேசு சிலுவையில் அறையப்படுதல் தொகு

பதினொன்றாம் நிலை: இயேசுவோடு தொங்கிய மனம் மாறிய குற்றவாளிக்கு அவர் பேரின்ப வீட்டை வாக்களித்தல் தொகு

பன்னிரண்டாம் நிலை: இயேசு மரியாவையும் யோவானையும் ஒருவரொருவரிடம் ஒப்படைத்தல் தொகு

பதின்மூன்றாம் நிலை: இயேசு சிலுவையில் இறத்தல் தொகு

பதினான்காம் நிலை: இயேசு கல்லறையில் அடக்கப்படுதல் தொகு

மேலும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. விவிலிய சிலுவைப் பாதை
  2. "விவிலிய சிலுவைப் பாதை - திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்". Archived from the original on 2007-06-08. பார்க்கப்பட்ட நாள் 2011-04-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவிலிய_சிலுவைப்_பாதை&oldid=3571841" இலிருந்து மீள்விக்கப்பட்டது