வி. பி. இராமன்

தமிழக அரசியல்வாதி, தமிழகத்தின் அரசு தலைமை வழக்கறிஞர்

வெங்கட்ட பட்டாபிராமன் (Venkata Pattabhi Raman) (3 அக்டோபர் 1932 - 2 திசம்பர் 1991) என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார், இவர் 1977 முதல் 1979 வரை தமிழகத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். இவரது மகன் மோகன் ராமன் ஒரு புகழ்பெற்ற நடிகர்.

வெங்கட்ட பட்டாபிராமன்
தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
1977–1979
முன்னையவர்கே. பராசரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1932-10-03)3 அக்டோபர் 1932
இந்தியா, தமிழ்நாடு, சென்னை
இறப்பு2 திசம்பர் 1991(1991-12-02) (அகவை 59)
தமிழ்நாடு, சென்னை
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பிள்ளைகள்மோகன் ராமன்,
பி. எஸ். இராமன்,
பி. ஆர். இராமன்
முன்னாள் கல்லூரிஇலயோலாக் கல்லூரி, சென்னை, சென்னை சட்டக் கல்லூரி
வேலைவழக்கறிஞர்
தொழில்மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர்

ஆரம்பகால வாழ்க்கை தொகு

இராமன் 1932 அக்டோபர் 3 அன்று சென்னையில் பிறந்தார், சர்ச் பார்க் பள்ளியியல் பள்ளிப்படிப்பை முடித்தார். பள்ளிப்படிப்பு முடிந்ததும், இராமன் லயோலா கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். மேலும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார், தங்கப் பதக்கத்துடன் தனது படிப்பை முடித்தார்.

அரசியல் தொகு

 
வி.பி.ராமன், இடமிருந்து மூன்றாவது (அன்னாதுரைக்குப் பின் வரிசையில்)

துவக்கத்தில், இராமன் பொதுவுடமை இயக்கத்தை நோக்கி ஈர்க்கப்பட்டார். எனினும், இவர் 1955இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். மேலும் கட்சியின் சட்டதிட்டங்களை ஈ. வெ. கி. சம்பத் மற்றும் இரா. செழியன் ஆகியோரிடன் இணைந்து உருவாக்கினார்.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._இராமன்&oldid=3372335" இலிருந்து மீள்விக்கப்பட்டது