ஆச்சாரிய வீரசேனர் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய கணித மேதை. இவர் சமண தத்துவ ஞானி மற்றும் ஆச்சார்யருக்குத் தகுந்த வரிசையைச் சேர்ந்த ஒரு திகம்பர சாதுவும் ஆவார். இவர் ஒரு சிறந்த சொற்பொழிவாளர் மற்றும் கவிஞரும் ஆவார்[1]. வீரசேனர், தென்னகத்தில் ஜைன இலக்கிய மறுமலர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களுள் தலையாயவரான குந்தகுந்தர் ஆச்சாரிய பரம்பரையைச் சேர்ந்தவர்[2]. இவரது மாணவர் ஜினசேனர் ஆவார்.

ஆச்சாரிய வீரசேனர்

வீரசேனர் ஒரு கணிதவியலாளர். ஒரு திண்ம அடித்துண்டின் கன அளவு காணும் முறையைக் கண்டுபிடித்தவர். இவர் ஆய்வுசெய்த கருத்துருக்கள்: ஒரு எண்ணை எத்தனை தடவை எண் 2 ஆல் வகுக்க முடியும் -2 அடிமான மடக்கைகள் (ardhaccheda); 3 அடிமான மடக்கைகள் (trakacheda), 4 அடிமான மடக்கைகள் (caturthacheda.)[3]

ஒரு வட்டத்தின் சுற்றளவு C, விட்டம் d இரண்டுக்குமான தொடர்பைத் தரும் தோராயமான வாய்ப்பாட்டினை அளித்துள்ளார்:

C = 3d + (16d+16)/113

அதிகளவு விட்டமுடைய (d) வட்டங்களுக்கு இவ்வாய்ப்பாடு தரும் π  இன் தோராய மதிப்பு:

π ≈ 355/113 = 3.14159292... .

இம்மதிப்பு ஆரியபட்டியத்தில் ஆரியபட்டரால் தரப்பட்டுள்ள தோராய மதிப்பைவிடத் துல்லியமானது. [4]

மேற்கோள்கள் தொகு

  1. Jinasena. Ādi Purāņa
  2. Indranandi. Shrutāvatāra
  3. Gupta, R. C. (2000), "History of Mathematics in India", in Hoiberg, Dale; Ramchandani, Indu (eds.), Students' Britannica India: Select essays, Popular Prakashan, p. 329
  4. Mishra, V.; Singh, S. L. (February 1997), "First Degree Indeterminate Analysis in Ancient India and its Application by Virasena" (PDF), Indian Journal of History of Science, 32 (2): 127–133, archived from the original (pdf) on 2014-11-29, பார்க்கப்பட்ட நாள் 2015-11-04
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரசேனர்&oldid=3752729" இலிருந்து மீள்விக்கப்பட்டது