வெண்மைப் புரட்சி

வெண்மைப் புரட்சி என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் புதிய மேம்படுத்தப்பட்ட கால்நடைகளைப் பயன்படுத்தி அதிக பால் உற்பத்தியைப் பெருக்குவதாகும். தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த டாக்டர். வர்கீஸ் குரியன் இதனை முதலில் குஜராத் மாநிலத்தின் ஆனந்த் நகரத்தில் உள்ள அமுல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் செயல்படுத்தினார். இதனால் இவரை இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.[1]

அமுல் கூட்டுறவு பால் பண்னையை நிறுவிய மும்மூர்த்திகள்:வர்கீஸ் குரியன், திரிபுவன்தாஸ் படேல் மற்றும் அரிசந்த் மேகா தலாயா

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Kurien, Verghese (2007). "India' s Milk Revolution: Investing in Rural Producer Organizations". in Narayan, Deepa. Ending Poverty in South Asia: Ideas that work. Washington D.C., USA: (The World Bank). பக். 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8213-6876-3. https://books.google.com/books?id=IV9m8gF6XDcC&pg=PA42. பார்த்த நாள்: 13 September 2012. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்மைப்_புரட்சி&oldid=3294450" இலிருந்து மீள்விக்கப்பட்டது