வெலிங்டன் ஏரி

வெலிங்டன் ஏரி (அ) எமனேரி என்பது தமிழகத்தின் கடலூர் மாவட்டம், திட்டக்குடிக்கு அருகே ஐவனூர் மற்றும் கீழ்ச்செருவாய் என்னும் கிராமத்தில் உள்ள ஓர் ஏரி. இது கடலூர் மாவட்டத்தில் உள்ளது, தமிழகத்தில் இரண்டாவது பெரிய ஏரி ஆகும். 25,000 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கிறது. சுமார் 67 கிராமம் விவசாயத்திற்கு மற்றும் குடிநீர் வசதிக்கும் முக்கிய பங்கு அளித்து வருகிறது.

வெலிங்டன் ஏரி
அமைவிடம்கீழ்ச்செருவாய்,திட்டக்குடி கடலூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்11°20′10″N 79°32′40″E / 11.33611°N 79.54444°E / 11.33611; 79.54444
ஏரி வகைநீர் தேக்கம்
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச ஆழம்32 அடி

வரலாறு தொகு

திட்டக்குடி-திருச்சி முக்கியச்சாலையில் கீழ்ச்செருவாய் அமைந்துள்ளது. கீழ்ச்செருவாயில் வெலிங்டன் நீர்த் தேக்கம் , 1918-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. வெலிங்டன் ஏரி என்றிருந்தாலும் கூட, பரவலாக "எமினேரி" என்று அழைக்கப்டுகிறது. உருவான போது, மொத்த கொள்ளளவாக 31 அடி இருந்தது. பல ஆண்டுக்குப் பின்னர் ஏரியின் உயரம் 32 அடியாக உள்ளது. அண்மையில் ஏரியின் கரை 300 மீட்டர் நீளத்துக்கு தொடர்ந்து பூமிக்குள் அழுந்திக் கொண்டு இருந்ததால், பலவீனப்பட்டு வந்தது. அதனால், ரூ. 30 கோடி செலவிட்டு, கரை பலப்படுத்தப்பட்டது. சீரமைப்புக்குப் பின்னர், மொத்த கொள்ளளவு 29.4 அடிதான் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தண்ணீர் வருகை தொகு

மழை பெய்தால் வெள்ளாற்று வழியாக தொழுதூர் அணைக்கட்டுக்கு தண்ணீர் வரும். அங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீர் குறிப்பிட்ட அடி உயர்ந்ததும், அங்கிருந்து வெலிங்டன் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

பாசனமுறையும் பயன்பாடும் தொகு

இந்த ஏரியானது, மேல்மட்டக் கால்வாய், கீழ் மட்டக் கால்வாய் என இரண்டு பகுதிகளாகப் பிரித்து விவசாயத்திற்கு நீர் வழக்கப்படுகிறது. கீழ்மட்டக் கால்வாய் மூலம் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன் அடையும். . நீர்ப்பாசனத்திற்கு மட்டுமின்றி, மீன் வளர்ப்புக்காகவும் இந்த ஏரி பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது

பயன்பாடு தொகு

பயிர் விளைச்சல் தொகு

  1. கரும்பு
  2. நெல்
  3. வாழை
  4. காய்கறி சாகுபடி

உயிரி வளர்ப்பு தொகு

  1. மீன் வளர்ப்பு

உசாத்துணை தொகு

மேலும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெலிங்டன்_ஏரி&oldid=3798868" இலிருந்து மீள்விக்கப்பட்டது