சிறப்பு எல்லைப்புறப் படை
சிறப்பு எல்லைப்புறப் படை (Special Frontier Force (SFF) இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு உளவுப் பிரிவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் கீழ் செயல்படும் துணைநிலை இராணுவப் படையாகும்.[1] இது இந்திய சீனப் போருக்குப் பின்னர் 14 நவம்பர் 1962-இல் இமயமலையில் உள்ள இந்திய எல்லைகளை, சீனர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் பார்வையிலிருந்து கண்காணிப்பதற்கான அமைக்கப்பட்ட சிறப்பு எல்லைப் படையாகும்.[2] இப்படையில் 5,000 வீரர்கள் கொண்டுள்ளனர்.
சிறப்பு எல்லைப்புறப் படை | |
---|---|
![]() பனிச் சிங்கம், சிறப்பு எல்லைப்புறப் படையின் சின்னம் | |
உருவாக்கம் | 14 நவம்பர் 1962 |
நாடு | ![]() |
வகை | சிறப்பு பாதுகாப்புப் படைகள் |
பொறுப்பு | சிறப்பு உளவுப் பணி நேரடி இராணுவ நடிவடிக்கை பணயக் கைதிகளை மீட்டல் எதிர்-பயங்கரவாத நடவடிக்கை வழக்கற்ற போர் முறை வெளிநாட்டின் உட்பாதுகாப்பில் தலையிடுதல் இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்தல் |
அளவு | 5,000 - 10,000 படைவீரர்கள் |
பகுதி | ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு |
தலைமையிடம் | சக்ராதா, டேராடூன் மாவட்டம், உத்தராகண்ட், இந்தியா |
சுருக்கப்பெயர்(கள்) | எஸ்டாபிளிஷ்மெண்ட் 22 அல்லது 22 |
சண்டைகள் | வங்காளதேச விடுதலைப் போர் புளூஸ்டார் நடவடிக்கை காக்டஸ் நடவடிக்கை பவன் நடவடிக்கை கார்கில் போர் ரட்சக் நடவடிக்கை 2020 இந்தியா-சீனா எல்லை மோதல்கள் |
வானூர்திகள் | |
உலங்கு வானூர்தி | சீட்டா லான்சர் |
சரக்கு உலங்கு வானூர்தி | மில்-மி 17 |
பயன்பாட்டு உலங்கு வானூர்தி | துருவ் சேத்தக் |
வேவு | IAI Searcher II IAI Heron DRDO Rustom |
போக்குவரத்து | Gulfstream III IAI Astra 1125 |
இந்திய அமைச்சரவை செயலகத்தின் பாதுகாப்பு இயக்குநரின் கீழ், 5,000 வீரர்கள் கொண்ட இப்படையின் தலைமை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இந்திய இராணுவத்தின் மேஜர் ஜெனரல் இருப்பார். இப்படையின் செயல்பாடுகள் குறித்து இவர் இந்தியப் பிரதமருக்கு மட்டும் அறிக்கை அளிப்பார்.[3] இதன் தலைமையிடம் உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவடடத்தில் உள்ள சக்ராதா எனுமிடத்தில் உள்ளது.[4]
இந்த சிறப்பு எல்லைப்புற படை வீரர்கள் இந்திய எல்லைபுறங்களில் குறிப்பாக இமயமலைப் பகுதிகளில், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் உளவுப் பணிகள் மேற்கொள்வதில் கைதேர்ந்தவர்கள். இப்படையின் அனைத்து வீரர்ககளும் இமயமலை பகுதியில் வாழும் திபெத்தியர்கள் மற்றும் கோர்க்காக்கள் ஆவர்.[5] இவர்களது முகம் மற்றும் உடலமைப்பு சீனர்கள் போன்று இருப்பதால் திபெத் மற்றும் லடாக் போன்ற பகுதிகளில் இப்படை வீர்ர்களால் இராணுவ உளவுப் பணிகளில் ஈடுபட வசதியாக உள்ளது.
சிறப்பு எல்லைப்புற படை இதுவரை வங்காளதேச விடுதலைப் போர், புளூஸ்டார் நடவடிக்கை[6] காக்டஸ் நடவடிக்கை, பவன் நடவடிக்கை, கார்கில் போர், ரட்சக் நடவடிக்கை மற்றும் 2020 இந்திய-சீனா எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Bollywood Sargam – Special: Tibetan faujis in Bluestar பரணிடப்பட்டது 2 மே 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Ajai Shukla (2020-09-02). "Ladakh intrusions: Special Frontier Force takes first casualties". Business Standard India. https://www.business-standard.com/article/defence/ladakh-intrusions-special-frontier-force-takes-first-casualties-120090200030_1.html.
- ↑ Chhina, Man Aman Singh; Kaushik, Krishn (2020-09-02). "Explained: What is the Special Frontier Force, referred to as Vikas Battalion?". The Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2020-09-02.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Establishment 22". chushigangdruk.org. 17 திசம்பர் 1971. Archived from the original on 17 சனவரி 2016. Retrieved 28 செப்டெம்பர் 2012.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch; 6 சூலை 2015 suggested (help) - ↑ Special Frontier Force: Why is a covert group now under the spotlight?
- ↑ Bobb, Dilip (15 December 1980). "Special Frontier Force: More of a white elephant than an effective intelligence outfit?". India Today. https://www.indiatoday.in/magazine/indiascope/story/19801215-special-frontier-force-more-of-a-white-elephant-than-an-effective-intelligence-outfit-773611-2013-12-02.