சிவா செல்லையா

சிவா செல்லையா (Siva Selliah, 1924–1997) இலங்கைத் தமிழ் நீதிபதியும், இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், உயர்நீதிமன்ற, மற்றும் நீதித்துறை நடுவரும் ஆவார்.[1] இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மெலவை உறுப்பினராகவும் இருந்தார்.

சிவா செல்லையா
Siva Selliah
இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1924
கொழும்பு, இலங்கை
இறப்பு1997
கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கை
துணைவர்பவானி செல்லையா
உறவுகள்சர் அருணாசலம் மகாதேவா, நீதிபதி வி. மாணிக்கவாசகர்
பிள்ளைகள்சிவகுமார், செல்வலட்சுமி, சிவகாமி
வாழிடம்(s)ரொசுமீது பிளேசு, கறுவாத் தோட்டம், கொழும்பு, இலங்கை
முன்னாள் கல்லூரிஇலங்கை சட்டக் கல்லூரி,
கொழும்பு றோயல் கல்லூரி

சிவநாதன் செல்லையா என்ற இயற்பெயர் கொண்ட சிவா செல்லையா 1924 ஆம் ஆண்டில் கொழும்பில் நல்லதம்பி செல்லையா என்பவருக்குப் பிறந்தார். தந்தை ஒரு பங்குத் தரகர். கொழும்பு றோயல் கல்லூரியில் கலி பயின்ற சிவநாதன் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.[2]

சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின்னர் நீதித்துறையில் நுழைந்தார். நீதித்துறை நடுவராகப் பணியாற்றிய பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். 1987 ஆம் ஆண்டில் இளைப்பாறும் வரை இவர் இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.commonlii.org//cgi-bin/disp.pl/lk/cases/LKCA/1987/16.html?query=siva%20selliah
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-06. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  3. http://sundaytimes.lk/980614/newsm.html

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவா_செல்லையா&oldid=3697647" இலிருந்து மீள்விக்கப்பட்டது