சுப. அருள்மணி
மருத்துவர் சுப. அருள்மணி, பாட்டாளி மக்கள் கட்சியில் துணைப் பொதுச் செயலாளராக இருக்கின்றார். புதுக்கோட்டை மாவட்டத்திற்கான மாவட்டக் குழு உறுப்பினராக 2006 இல் தெரிவு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடித் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார்.
மருத்துவர் அருள்மணி புதுகோட்டை மாவட்டம், கீரமங்கலம் தாலுகா சேந்தன்குடியைச் சேர்ந்தவர். தந்தை சுப்பிரமணியன் ஆசிரியர். மருத்துவப் படிப்பில் உயர் கல்வி பெற்று, அறந்தாங்கியில் 'அம்மன் மருத்தவ மனை' என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.