சூழலியல் நகர்ப்புறவியம்

சூழலியல் நகர்ப்புறவியம் (ecological urbanism) என்பது, சூழலியலின் அடிப்படையில் சமூகம் சார்ந்ததும், சூழலைக் கவனத்தில் கொள்வதுமான ஒரு நகர்ப்புறவியம் ஆகும். இது நகர வடிவமைப்பு, நகரத் திட்டமிடல் ஆகியவற்றின் கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் சூழலியல் மற்றும் காலநிலையியல், நீரியல், புவியியல், உளவியல், வரலாறு, கலை போன்ற பல்வேறு சூழல் சார்ந்த துறைகளுடன் இணைக்கின்றது. இது, பசுமை நகர்ப்புறவியம், தாங்குநிலை நகர்ப்புறவியம் போன்ற நகர்ப்புறவிய வகைகளிலும் பார்க்கக் குறைந்த அளவான கருத்தியல் அடிப்படையில் இயங்குகிறது. சூழலியல் நகர்ப்புறவியம் பல வழிகளிலும் நிலத்தோற்ற நகர்ப்புறவியத்தில் இருந்து வளர்ச்சியடைந்தது என்பதுடன் அதனை விமர்சிப்பதாகவும் உள்ளது. இது நகர வடிவமைப்பிலும் அதன் மேலாண்மையிலும் முழுதளாவிய அணுகுமுறை ஒன்றின் தேவையை வலியுறுத்துகிறது.

"சூழலியல் நகர்ப்புறவியம்" என்பதற்கு ஈடான "ecourbanismo" (எக்கோஏர்பனிஸ்மோ) என்னும் சொல் கட்டிடக்கலைஞரான மிகுவேல் ருவானோ (Miguel Ruano) என்பவர் எழுதிய எசுப்பானிய மொழி நூலொன்றில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர், 2003 ஆம் ஆண்டில் ஒரிகோன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாநாட்டில் இதற்கிணையான Ecological urbanism (எக்கோலாஜிக்கல் ஏர்பனிசம்) என்னும் ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும் தொகு