ஜெயந்த் கைகினி

கன்னட கவிஞர்

ஜெயந்த் கைகினி (Jayanth Kaikini) (பிறப்பு: ஜனவரி 24, 1955), ஒரு இந்திய (கன்னட) கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாடக ஆசிரியர், கன்னடத் திரையுலகில் பங்காற்றி வரும் ஒரு அறிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.

ஜெயந்த் கைகினி

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

கைகினி கோகர்ணாவில் பள்ளி ஆசிரியர் மற்றும் கன்னட எழுத்தாளரான, கௌரிஷ் கைகினி மற்றும் சமூக சேவையாளரான சாந்தா என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார். ஒரு முதுநிலை பட்டப்படிப்பை உயிர்வேதியியல் துறையில், தார்வாட், கர்நாடக பல்கலைக்கழகத்தில், பயின்றார். பின்னர், இவர் மும்பை சென்றார். இவர் பல வருடங்களுக்குத் தொடர்ந்து ஒரு வேதியியலாராக பணிபுரிந்தார். [1] இவர் இப்போது பெங்களூரில் தனது மனைவி சுமிதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவரது மகள் சராஜனா ஒடிஸி நடனக் கலைஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் / பொறுப்பாளராக உள்ளார். இவரது மகன் ரித்விக், பல ஊடகங்களில் கலைஞராக பணியாற்றுகிறார். [2] ஜெயந்த், கன்னடத்தைத் தவிர கொங்கனி (அவரது தாய்மொழி), மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசுகிறார்.

தொழில் தொகு

கன்னடத்தில் இன்று இளைய எழுத்தாளர்களில் மிக முக்கியமான ஒருவராக ஜெயந்த் கைகினி கருதப்படுகிறார். சிறுகதைகள், திரைப்பட வசனங்கள் மற்றும் கவிதைகளை எழுதியுள்ளார். பெங்களூரை மையமாகக் கொண்டவர். இவரது கவிதைகள் நுட்பமான கற்பனையினால் வகைப்படுத்தப்படுகின்றன. பொதுவானதாகத் தோன்றும் ஒரு நிமிட ஆவணங்கள், ஒரு பேச்சுவழக்கு மற்றும் எந்தவொரு கவிதைகளிலும் ஈடுபட மனசாட்சி மறுப்பது போன்றவற்றை இவரின் படைப்புகளில் காணலாம். இதுவரை, சிறுகதைகள், நான்கு கவிதை புத்தகங்கள், மூன்று நாடகங்கள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பை இவர் வெளியிட்டுள்ளார்.

திரைப்பட பாடலாசிரியர் தொகு

டாக்டர் ஜெயந்த் கைகினி சிகுரிடா கனசு திரைப்படத்திலிருந்து தொடங்கி திரைப்படங்களுக்குப் பாடல் எழுதத் தொடங்கினார். கன்னட திரைப்பட நடிகரும் பாடகருமான டி.ஆர். ராஜ்குமார் " பந்துவே ஓ பந்துவே " எனத் தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார். இது, ஜெயந்த் கைகினியின் அறிமுக பாடல் ஆகும். இதற்கு, வி மனோகர் இசை அமைத்துள்ளார். கன்னட திரைப்படப் பாடல்களின் தரத்தை புரட்சிகரமாக்கிய பெருமை இவருக்கு உண்டு எனலாம். இலக்கியத்தின் உன்னதமான தொடுதலும், அழகான கற்பனையும் இவரது பாடல்களில் இடம் பெற்றுள்ளன. கொண்டவர். முங்காரு மலே, கலிபாதா, மிலானா போன்ற படங்களில் இவர் எழுதிய பாடல்கள், நெஞ்சைத் தொடுகின்ற மற்றும் மறக்கமுடியாத பாடல்களாக உள்ளன.

தொலைக்காட்சி பங்களிப்பு தொகு

ஈ.டி.வி கன்னடா வில், "ராசா ருசிகே நமஸ்காரா" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கினார். இது ராஷ்டிரகவி குவேம்புவின் வாழ்க்கை வரலாறு பற்றிய நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி ஒரு குறிப்பிட்ட பிரிவு பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. "கடலா தீரதா பார்கவா", போன்ற பல தொடர்களுடன் இவர் அதைத் தொடர்ந்தார். சமீபத்தில் இவர், "யதே தும்பி ஹாடுவேணு" என்கிற தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பிரபல கன்னட திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர் நாத பிரம்மா அம்சலேகாவுடன் இணைந்து, அந்த நிகழ்ச்சியின் ஒரு நடுவராக இருந்தார்.

விருதுகள் தொகு

கைகினி 1974 இல் தனது பத்தொன்பது வயதில் தனது முதல் கவிதைத் தொகுப்பிற்காக கர்நாடக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். 1982, 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் தனது சிறுகதைத் தொகுப்புகளுக்காக மீண்டும் அதே விருதைப் பெற்றார். அவரது கவிதைக்காக தினகர தேசாய் விருது, புனைகதைக்கான பி.எச்.ஸ்ரீதர் விருது, அத்துடன் கதா தேசிய விருது மற்றும் அவரது படைப்பு எழுத்துக்காக ருஜுவத்து அமைப்பின் உறுப்பினர் கௌரவம் ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

குறிப்புகள் தொகு

  1. "Jayant Kaikini".
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-01-05.

வெளி இணைப்புகள் தொகு

  • "When words flow". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 27 March 2018.

டெக்கான் ஹெரால்ட்; பார்த்த நாள் 27 மார்ச்சு, 2018.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயந்த்_கைகினி&oldid=3573298" இலிருந்து மீள்விக்கப்பட்டது