ஜொகூர் மாநில சட்டமன்றம்

ஜொகூர் மாநிலத்தின் சட்டப் பேரவை

ஜொகூர் மாநில சட்டமன்றம் அல்லது ஜொகூர் சட்டப் பேரவை (மலாய்: Dewan Negeri Johor; ஆங்கிலம்: Johor State Legislative Assembly; சீனம்: 吉打州议会) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் சட்டப் பேரவையாகும்.[2]

ஜொகூர்
மாநில சட்டமன்றம்
Johor State Legislative Assembly
Dewan Negeri Johor
15-ஆவது சட்டப் பேரவை
மரபு சின்னம் அல்லது சின்னம்
ஜொகூர் மாநில சட்டமன்ற சின்னம்
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு1959
தலைமை
சுல்தான்
சுல்தான் இப்ராகிம் இஸ்மாயில்
23 சனவரி 2010 (2010-01-23) முதல்
புவாட் சர்காசி, பாரிசான்-அம்னோ
21 ஏப்ரல் 2022 (2022-04-21) முதல்
துணைப் பேரவைத் தலைவர்
சம்சுல் பாரி சமாலி,
பாரிசான்-அம்னோ
21 ஏப்ரல் 2022 (2022-04-21) முதல்
ஓன் அபிஸ் காசி, பாரிசான்-அம்னோ
15 மார்ச்சு 2022 (2022-03-15) முதல்
எதிர்க்கட்சித் தலைவர்
ஆண்ட்ரூ சென் கா எங், பாக்காத்தான்-ஜசெக
11 திசம்பர் 2022 (2022-12-11) முதல்
செயலாளர்
சுபானா யூசோப்[1]
கட்டமைப்பு
உறுப்பினர்கள்56
குறைவெண் வரம்பு:19
எளிய பெரும்பான்மை: 29
மூன்றில் இரண்டு பெரும்பான்மை: 38
அரசியல் குழுக்கள்
ஆண்டு
13.03.2022

அரசாங்கம் (40)
     பாரிசான் (40)

நம்பிக்கை மற்றும் வழங்கல் (13)
     பாக்காத்தான் (13)

எதிர்க்கட்சிகள் (14)
     பெரிக்காத்தான் (3)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
12 March 2022
அடுத்த தேர்தல்
20 June 2027
கூடும் இடம்
சுல்தான் இஸ்மாயில் கட்டிடம்
Sultan Ismail Building
இசுகந்தர் புத்திரி, ஜொகூர் பாரு, ஜொகூர்
சுல்தான் இப்ராகிம் கட்டிடம், ஜொகூர் பாரு, ஜொகூர்
வலைத்தளம்
www.johor.gov.my
ஜொகூர் மாநில சட்டமன்றத் தொகுதிகள்

மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றான ஜொகூர் மாநிலத்தில், சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும். ஜொகூர் மாநில சட்டமன்றம் 56 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், கோத்தா இசுகந்தர், (Kota Iskandar) இசுகந்தர் புத்திரியில் (Iskandar Puteri) உள்ள சுல்தான் இஸ்மாயில் கட்டிடம் (Sultan Ismail Building); வளாகத்தில் ஜொகூர் மாநிலப் பேரவை கூடுகிறது.

பொது தொகு

ஜொகூர் மாநில சட்டமன்றம் ஜொகூர் மாநிலத்திற்குப் பொருத்தமான சட்டங்களை இயற்றுகிறது. ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் மூன்று அமர்வுகளை நடத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் மாநில வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

ஜொகூர் மாநில சட்டமன்றம் ஒரு நாடாளுமன்றத்தைப் போல இயங்குகிறது. ஜொகூர் மாநில சட்டமன்றம், ஜொகூர் மாநிலம் தொடர்பான சட்டங்களை நிறைவேற்றுகிறது. அதன் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் அல்லது இடைத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் உரிமை தொகு

மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், பொதுப் புகார்கள் போன்ற தற்போதைய பிரச்சனைகளைச் சுதந்திரமாக விவாதிக்கச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன.

நிதி விசயங்களில், மாநில அரசாங்கத்திற்கு நிதி வழங்குவதற்கு மாநிலச் சட்டமன்றம் ஒப்புதல் அளிக்கிறது; மற்றும் வரி செலுத்துவோர் நலன் கருதி, அந்த நிதி ஒதுக்கீடு முறையாகச் செலவிடப் படுவதையும் உறுதி செய்கிறது.

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை ஜொகூர் சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும்.

சபாநாயகர் தலைமை தொகு

ஜொகூர் மாநில சட்டமன்றக் கூட்டங்களுக்கு சபாநாயகர் (Speaker) தலைமை தாங்குகிறார். தவிர விவாதங்களின் போது ஒழுங்கை உறுதிப் படுத்துகிறார். தற்போதைய சபாநாயகர் புவாட் சர்காசி (Mohd Puad Zarkashi).

சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி முதலமைச்சர் தலைமையில் மாநில அரசாங்கத்தை அமைக்கிறது. பின்னர் அவர் மாநிலச் செயற்குழுவை (Majlis Mesyuarat Kerajaan) நியமிக்கிறார்.

ஜொகூர் வரலாறு தொகு

ஜொகூர் எனும் சொல் ‘சவுகர்’ (Jauhar) எனும் அரபுச் சொல்லில் இருந்து வந்தது. சவுகர் என்றால் மதிப்புமிக்க இரத்தினக்கல் என்று பொருள்படும். ஒரு காலக் கட்டத்தில் இங்கு இரத்தினக் கற்கள் நிறைய கிடைத்தன. அதனால், அங்கு வாழ்ந்த மலாய்க்காரர்கள் அந்த இடத்திற்கு ஜொகூர் என்று பெயர் வைத்தனர். [3]

அதற்கு முன்னர் மூவார் ஆற்றில் இருந்து சிங்கப்பூர் தீவு வரையிலான நிலப் பகுதியை 'உசோங் தானா' (Ujong Tanah) என்று அழைத்தனர். உசோங் தானா என்றால் நிலத்தின் முனை என்று பொருள். சொகூருக்கு இன்னும் ஒரு சிறப்பு உள்ளது. ஆசியக் கண்ட நிலப் பகுதியின் தெற்கே மிகத் தொலைவில் அமைந்த முனை ஜொகூரில் தான் உள்ளது.[4][5]

அலாவுதீன் ரியாட் சா II தொகு

16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜொகூர் சுல்தானகம் உருவாக்கம் பெற்றது. அந்தச் சுல்தானகத்தை உருவாகியவர் அலாவுதீன் ரியாட் ஷா II. இவர் மலாக்கா சுல்தான்களில் ஆகக் கடைசியாக மலாக்காவை ஆட்சி செய்த சுல்தான் மகமுட் ஷா என்பவரின் புதல்வர் ஆவார்.

மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றியதும் அவர்களிடம் இருந்து தப்பிக்க சுல்தான் மகமுட் ஷா அங்கிருந்து ஜொகூருக்கு இடம் பெயர்ந்தார். மலாக்கா பேரரசுவிற்குப் பின்னர் உருவாக்கம் பெற்ற இரு வாரிசு அரசுகளில் ஜொகூர் சுல்தானகம் ஒன்றாகும். மற்றொரு வாரிசு பேராக் சுல்தானகம் ஆகும்.

முசபர் சா தொகு

பேராக் சுல்தானகத்தைச் சுல்தான் முகமட் ஷாவின் மற்றொரு புதல்வரான சுல்தான் முசபர் ஷா உருவாக்கினார். அலாவுதீன் ரியாட் ஷா II உருவாக்கிய ஜொகூர் சுல்தானகம், போர்த்துகீசியர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. ஜொகூர் சுல்தானகம் அதன் ஆட்சியின் உச்சத்தில் இருந்த போது பகாங், இந்தோனேசியாவின் ரியாவு தீவுகள், சுமத்திராவின் ஒரு பகுதி போன்ற இடங்கள் அதன் ஆளுமையின் கீழ் இருந்தன.[6]

வட சுமத்திராவை ஆட்சி செய்த அச்சே அரசு, மலாக்காவை ஆட்சி செய்த போர்த்துகீசிய அரசு போன்ற அப்போதைய அரசுகளுடன் நீண்ட கால சண்டை சச்சரவுகளில் ஜொகூர் அரசு ஈடுபட வேண்டிய நிலைமையும் இருந்து வந்தது. இந்தக் காலக் கட்டங்களில் நட்பு மலாய் மாநிலங்களும், டச்சுக்காரர்களும் ஜொகூர் சுல்தானகத்துடன் தோழமை பாராட்டி வந்தனர்.

போர்த்துகீசியர்களுக்கு அச்சுறுத்தல் தொகு

அலாவுதீன் ரியாட் ஷா II உருவாக்கிய ஜொகூர் சுல்தானகம், போர்த்துகீசியர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. ஜொகூர் சுல்தானகம் தனது ஆட்சியின் உச்சத்தில் இருந்த போது பகாங், இந்தோனேசியாவின் ரியாவு தீவுகள், சுமத்திராவின் ஒரு பகுதி போன்றவை அதன் ஆளுமையின் கீழ் இருந்தன.[7]

1641-ஆம் ஆண்டு ஜொகூர் அரசின் உதவியுடன் டச்சுக்காரர்கள் மலாக்காவைக் கைப்பற்றினர். அதன் பின்னர் ஜொகூர் அரசு மலர்ச்சி பெற்ற வணிகத் தளமாகப் புகழ் பெற்றது. இருப்பினும் 17-ஆம் 18-ஆம் நூற்றாண்டுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட உள்நாட்டு விரிசல்களினால் ஜொகூர் அரசின் மேலாண்மை மங்கிப் போனது.[8]

தெமாங்கோங் டத்தோ இபுராகிம் தொகு

 
சுல்தான் இசுகந்தர் குடிநுழைவு தலைமையகம்.
 
சொகூரில் இருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் நீர்க்குழாய்கள்.

18-ஆம் நூற்றாண்டில், சுலாவாசியைச் சேர்ந்த பூகிஸ்காரர்களும், சுமத்திராவைச் சேர்ந்த மினாங்கபாவு மக்களும் ஜொகூர்-ரியாவ் பேரரசின் அரசியல் ஆற்றல்களைக் கட்டுப்படுத்தி வந்தனர். 1855-இல் சிங்கப்பூரை ஆட்சி செய்த பிரித்தானியர்களுக்கும் ஜொகூர் மாநிலத்தின் சுல்தான் அலிக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் (Anglo-Johor Treaty) செய்து கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி ஜொகூர் அரசு, டத்தோ தெமாங்கோங் (Temenggong) டத்தோ இபுராகிமிடம் ஒப்படைக்கப் பட்டது. டத்தோ தெமாங்கோங் டத்தோ இபுராகிம், ஜொகூர் மாநிலத்தின் தென்பகுதியில் தஞ்சோங் புத்திரி எனும் ஒரு புதிய நகரத்தை உருவாக்கினார்.

இந்த நகரம் தான் இப்போதைய ஜொகூர் பாரு ஆகும். தெமாங்கோங் டத்தோ இபுராகிமிற்குப் பின்னர் அவருடைய புதல்வர் டத்தோ தேமாங்கோங் அபு பாக்கார் (Sultan Sir Abu Bakar) ஜொகூர் சுல்தானகத்தின் அரியணையில் அமர்ந்தார்.

சுல்தான் அபு பாக்கார் தொகு

இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியார் அவருக்கு ஸ்ரீ மகாராசா ஜொகூர் எனும் சிறப்புப் பெயரை வழங்கினார். சுல்தான் அபு பாக்கார் ஜொகூர் மாநிலத்திற்கு ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொடுத்தார். பிரித்தானிய பாணியிலான ஓர் அரசியல் நிர்வாகத்தை ஏற்படுத்தினார். எதிர்கால சுல்தான்களுக்காக ஓர் அதிகாரத்துவ அரண்மனையையும் கட்டினார்.

அரசாங்கமும் அரசியலும் தொகு

அரசியல் சாசனப் படி சுல்தான் தான் மாநிலத்தை ஆட்சி செய்பவராகும். அவருடைய ஆளுமைத் தகுதி பாரம்பரிய மரபு வழியாக வருகின்றது. ஆயுள் காலம் வரை அவர் ஆட்சி செய்வார். மாநிலத்தில் இசுலாம் சமயத்தின் தலைவராகவும் இவர் செயல் படுகின்றார்.

ஜொகூர் மாநிலத்தில் இப்போது சுல்தான் இப்ராகிம் இஸ்மாயில் (Sultan Ibrahim Ismail of Johor) என்பவர் சுல்தானாக இருக்கின்றார். இவர் 2010-ஆம் ஆண்டில் இருந்து சுல்தானாக அரச பணி செய்து வருகிறார்.

மாநிலச் செயலாட்சி மன்றம் (State Executive Council) சுல்தானைத் தலைவராகக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. அரசாங்க நிர்வாகச் சேவைத் தலைவராக இருப்பவர் மாநில முதலமைச்சர். இவரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைக்கிறார்கள். இவருக்கு உதவியாகப் பதின்மர் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநில அமைச்சர்கள் ஆவர்.

இவர்கள் மாநிலச் சட்டசபையில் இருந்து தேர்வு செய்யப் படுகின்றார்கள். மாநில முதலமைச்சரையும் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களையும் சுல்தான் நியமனம் செய்கின்றார்.

தற்போதைய ஜொகூர் சட்டமன்றம் (2022) தொகு

அரசு நம்பிக்கை ஆதரவு எதிரணி
பாரிசான் பாக்காத்தான் பெரிக்காத்தான்
40 13 3
33 4 3 10 1 1 1 2 1
அம்னோ மசீச மஇகா ஜசெக அமாணா பிகேஆர் மூடா பெர்சத்து பாஸ்

மேற்கோள் தொகு

  1. "Pejabat Jurutulis Dewan Negeri Johor".
  2. "Senarai Ahli Dewan Negeri Komposisi Ahli-Ahli Dewan Negeri Johor". பார்க்கப்பட்ட நாள் 23 December 2022.
  3. Abdul Latip bin Talib (14 July 2014) (in ms). Moyang Salleh. PTS Litera Utama. பக். 34–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-967-408-158-4. https://books.google.com/books?id=F8cCBAAAQBAJ&pg=PA34. 
  4. Ancient names of Johor, 2 March 2009, JohorBuzz, New Straits Times
  5. Jonathan Rigg (1862). A dictionary of the Sunda language of Java. Bataviaasch Genootschap van Kunsten en Wetenschappen. பக். 177–. https://books.google.com/books?id=XizCJm_ibRMC&pg=PA177. 
  6. Borschberg, Peter (11 January 2016). "Johor-Riau Empire". The Encyclopedia of Empire. Wiley Online Library. பக். 1–3. doi:10.1002/9781118455074.wbeoe105. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781118455074. 
  7. "For over a period of time, intermittent raids were carried out both by land and sea caused considerable hardship for the Portuguese at Melaka". Archived from the original on 2011-12-04. பார்க்கப்பட்ட நாள் 2011-12-12.
  8. "By 1660, Johor had become a flourishing entrepôt, although weakening and splintering of the empire in the late seventeenth and eighteenth century reduced its sovereignty". Archived from the original on 2008-01-12. பார்க்கப்பட்ட நாள் 2011-12-12.

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொகூர்_மாநில_சட்டமன்றம்&oldid=3775361" இலிருந்து மீள்விக்கப்பட்டது