தொலெமி

உரோம், எகிப்த்தைச் சேர்ந்த புவியியலாளரும், வானியலாளரும், சோதிடரும் ஆவார்.
(டாலேமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தொலெமி அல்லது தாலமி (Ptolemy, /ˈtɒləmi/) என்று பொதுவாக அழைக்கப்படும், குளோடியசு தொலெமாயெசு (Claudius Ptolemaeus, கிரேக்க மொழி: Κλαύδιος Πτολεμαῖος, இலத்தீன்: Claudius Ptolemaeus; அண். கிபி 90 – அண். 168) ஒரு புவியியலாளரும், வானியலாளரும், சோதிடரும் ஆவார். இவர் கிரேக்க மொழி பேசியவர். உரோமரின் கீழிருந்த எகிப்த்தில், கிரேக்கப் பண்பாட்டினராக இவர் வாழ்ந்தார். இவர் கிரேக்கப் பண்பாட்டைத் தழுவிக்கொண்ட ஒரு எகித்தியராகவும் இருக்கக்கூடும். இவருடைய குடும்பப் பின்னணி பற்றியோ, உருவ அமைப்புப் பற்றியோ, விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் அவர் எகித்தில் பிறந்தவர் என்பதே பலரது கருத்தாகும்.

தொலமி
Ptolemy
மத்தியகால ஓவியர் ஒருவர் வரைந்த தொலெமியின் படம்
பிறப்புஅண். கிபி 90
எகிப்து, உரோமைப் பேரரசு
இறப்புஅண். கிபி 168 (அகவை 77–78)
அலெக்சாந்திரியா, எகிப்து, உரோமைப் பேரரசு
பணிகணிதவியலாளர், புவியியலாளர், வானியல் வல்லுநர், சோதிடர்

தொலெமி, துறைசார் அறிவியல் நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அவற்றுள் மூன்று நூல்கள், பிற்காலத்து, இசுலாமிய மற்றும் ஐரோப்பிய அறிவியல் தொடர்பில் முக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகின்றன. ஒன்று, வானியல் துறைசார் நூலாகிய அலுமாகெசிட்டு (Almagest) என்பதாகும். அலுமாகெசிட்டு என்பது கிரேக்க மொழியில் பெரு நூல் ("The Great Treatise") எனப் பொருள்படும். அடுத்தது, சியோகிரஃபியா என்னும் புவியியல் தொடர்பான நூல். இது, கிரேக்கர்களும், உரோமர்களும் அறிந்திருந்த புவியியல் பற்றிய முழுமையான விளக்க நூல் ஆகும். மூன்றாவது, ஒரு சோதிட நூல். நான்கு நூல்கள் என்ற பொருள் தரும் இடெட்டிராபிப்புலோசு என்பதே நூலின் பெயர். இதிலே சாதகம் முதல் அரிசுட்டாட்டிலின் இயற்கைத் தத்துவம் வரை எடுத்தாண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொலெமி&oldid=3503372" இலிருந்து மீள்விக்கப்பட்டது