தகவுர் உசைன் ராணா

தகவுர் உசைன் ராணா (Tahawwur Hussain Rana, உருது: تہوّر حسین رانا, பிறப்பு: சனவரி 12, 1961)[1] ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட தீவிரவாதக் குழு லசுகர்-இ-தொய்பாவிற்கு துணை புரிந்ததாகவும் டேனிசு நாளிதழ் மார்கவிசன் யல்லாந்து போஸடன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள சிகாகோவில் வாழும் ஒரு பாக்கித்தானியக் கனடியர்.[2]

தகவுர் உசைன் ராணா
பிறப்பு12 சனவரி 1961 (அகவை 62)
படித்த இடங்கள்
  • Cadet College Hasan Abdal
பணிMilitary physician

2008 மும்பை தாக்குதல்களில் தொடர்பு உள்ளதாக இவர் மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டிலிருந்து அமெரிக்க சான்றாயர்கள் இவரை விடுவித்தனர்.[3] இந்தத் தீர்ப்பினால் ஏமாற்றமடைந்த இந்திய அரசு தில்லியில் உள்ள நீதிமன்றத்தில் ராணா மீது குற்றம் சாட்டி தேசிய புலானாய்வு முகமை வழக்குத் தொடரும் என அறிவித்தது.[4] 2013 சனவரி 17 இல், இவருக்கு 14 ஆன்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.[5]

மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி தஹவூர் ராணாவை இந்தியாவிற்கு நடத்து கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.[6]

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகவுர்_உசைன்_ராணா&oldid=3729398" இருந்து மீள்விக்கப்பட்டது