தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Tamil Nadu Teachers Recruitment Board) என்பது ஒரு தமிழ்நாடு அரசு நிறுவனம் ஆகும். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் கல்லூரி சாலையில் [1] உள்ள டிபிஐ வளாகத்தின் நான்காவது மற்றும் பதினோறாவது தளத்தில் இது அமைந்துள்ளது.
வகை | தமிழ்நாடு அரசின் தன்னாட்சி அமைப்பு |
---|---|
உருவாக்கம் | 1988 |
அமைவிடம் | ![]() |
இணையதளம் | ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் |
செயல்பாடுதொகு
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி [2][3] வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக இவ்வாரியம் செயல்பட்டு வருகிறது.
முக்கியத்துவம்தொகு
இந்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறை இந்தத் தேர்வுக்கான அரசாணையை வெளியிட்டது. இதன்படி, தமிழ் நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளை நடத்தும் முகமையாக இயங்கி வருகிறது.[4] முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு[5] நடத்தப்படும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.
நடத்தப்படும் தேர்வுகள்தொகு
- ஆசிரியர் தகுதி தேர்வு
- முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு [6]
- உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கான தேர்வு [3]
மேற்கோள்கள்தொகு
- ↑ http://www.magicbricks.com/College-Road-in-Chennai-map-mapid-GyFd2CZhZZc=
- ↑ http://trbchennai.blogspot.in/2013/11/blog-post.html
- ↑ 3.0 3.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-05-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-05-02 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://cms.tn.gov.in/sites/default/files/gos/sedu_e_71_2014.pdf
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=1722384
- ↑ http://www.padasalai.net/2014/11/pg-trb-notification-announced.html