தமிழ்நாட்டுக் கோயில்களின் கருணை இல்லங்கள்
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாட்டுக் கோயில்களில் குறிப்பிட்ட சில கோயில்களின் நிர்வாகத்தின் கீழ் ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிப்பதற்கான கருணை இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2005 - 2006 ஆம் ஆண்டில் 37 கோயில்களின் நிர்வாகத்தின் கீழ் 42 கருணை இல்லங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது இது 31 கோயில்களின் நிர்வாகத்தின் கீழ் 34 கருணை இல்லங்கள் என குறைந்து போய் விட்டன.
வ.எண் | கருணை இல்லம் அமைந்துள்ள ஊர் | வகை | நிர்வகிக்கும் கோயில் |
---|---|---|---|
1 | திருவேற்காடு, திருவள்ளூர் மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு. |
2 | திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம் | சிறுவர்-1, சிறுமியர்-1 | அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில், திருத்தணி. |
3 | பழனி, திண்டுக்கல் மாவட்டம் | சிறுவர்-1, சிறுமியர்-1 | அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், பழனி. |
4 | சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம். |
5 | மதுரை, மதுரை மாவட்டம் | சிறுமியர்-1 | அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை. |
6 | திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர். |
7 | இராமேசுவரம், இராமநாதபுரம் மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரம். |
8 | மயிலாப்பூர், சென்னை மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,மயிலாப்பூர். |
9 | மருதமலை, கோயம்புத்தூர் மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், மருதமலை. |
10 | பண்ணாரி, ஈரோடு மாவட்டம் | சிறுவர்-1, சிறுமியர்-1 | அருள்மிகு பண்ணாரி அம்மன் திருக்கோயில், பண்ணாரி. |
11 | அழகர்கோயில், மதுரை மாவட்டம் | சிறுமியர்-1 | அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயில். |
12 | சோளிங்கர், வேலூர் மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர். |
13 | திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை. |
14 | சுவாமிமலை, தஞ்சாவூர் மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில்,சுவாமிமலை. |
15 | சேலம், சேலம் மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு சுகவனேசுவரர் திருக்கோயில், சேலம். |
16 | தேக்கம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி. |
17 | அய்யம்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம் | சிறுவர்-1, சிறுமியர்-1 | அருள்மிகு வாழைத் தோட்டத்து அய்யன் திருக்கோயில், அய்யம்பாளையம். |
18 | திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம் | சிறுமியர்-1 | அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம். |
19 | உப்பிலியப்பன் கோயில், தஞ்சாவூர் மாவட்டம் | சிறுமியர்-1 | அருள்மிகு வெங்கிடாசலபதி திருக்கோயில், உப்பிலியப்பன் கோயில். |
20 | மாதவநல்லூர், கடலூர் மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மாதவநல்லூர். |
21 | திருநாகேசுவரம், தஞ்சாவூர் மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், திருநாகேசுவரம். |
22 | கொடுமுடி, ஈரோடு மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு மகுடேசுவரசுவாமி வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில்,கொடுமுடி. |
23 | ஈச்சநாரி, கோயம்புத்தூர் மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு விநயகர் திருக்கோயில், ஈச்சநாரி. |
24 | பேரூர், கோயம்புத்தூர் மாவட்டம் | சிறுமியர்-1 | அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர். |
25 | ஆனைமலை, கோயம்புத்தூர் மாவட்டம் | சிறுமியர்-1 | அருள்மிகு மாசானியம்மன் திருக்கோயில், ஆனைமலை. |
26 | காரைக்குடி, சிவகங்கை மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு கொப்புடைநாயகி அம்மன் திருக்கோயில், காரைக்குடி. |
27 | சிவன்மலை, ஈரோடு மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவன்மலை. |
28 | மடப்புரம், சிவகங்கை மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு அடைக்கலம்காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயில், மடப்புரம். |
29 | திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம் | சிறுமியர்-1 | அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி. |
30 | சென்னை, சென்னை மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், சென்னை. |
31 | தாயமங்கலம், சிவகங்கை மாவட்டம் | சிறுவர்-1 | அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம். |
- 31 கோயில்களின் நிர்வாகத்திலுள்ள 34 கருணை இல்லங்களில் சிறுவருக்கு 24 இல்லங்கள், சிறுமியருக்கு 10 இல்லங்கள் எனத் தனித்தனி இல்லங்கள் உள்ளன.
- திருத்தணி, பழனி, பண்ணாரி ஆகிய இடங்களில் சிறுவர், சிறுமியர் என இருவருக்கும் இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன.