திணை கொள் நெறி

(திணைக் கோட்பாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ் இலக்கியங்களில் வரும் அகத்திணைப் பாடல் இன்ன திணையைச் சேர்ந்தது எனக் கொள்வது எப்படி எனத் தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ளது.

  • உரிப்பொருள் என்பது திணையைத் தீர்மானிக்கும் உரிப்பொருள். பாடலில் புணர்தலும், அதனோடு தொடர்புடைய நிமித்தங்களும் கூறப்பட்டிருப்பின் அது குறிஞ்சித் திணை. இவ்வாறே பிற திணைகளும் கொள்ளப்படும்.[1]
  • இந்த உரிப்பொருள் பிற திணையோடு மயங்குவதில்லை. [2]
  • மலை, காடு, ஆறு, கடல் என்னும் நிலப்பகுதிகள் மயங்குவது இல்லை. [3]
  • என்றாலும் ஒரு நிலப்பகுதியில் உள்ள பொருள்கள் மற்றொரு நிலப்பகுதியில் மயங்கும். [4]
  • அன்றியும் எல்லா நிலப்பகுதிகளிலும் ஐந்து உரிப்பொருள் செயல்களும் நிகழும். [5]
  • இறைச்சி, உள்ளுறை உவமம் போன்ற குறிப்புப் பொருள்களாலும் இன்ன திணை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஆகையால் திணையைக் குறிப்பதற்கு நிலத்தை அடிப்படையாய்க் கொள்ளாமல் உரிப்பொருள் நிகழ்வுகளை அடிப்படையாய்க் கொள்வது நெறி.

அடிக்குறிப்பு தொகு

  1. புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
    ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
    தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே. - தொல்காப்பியம் அகத்திணையியல் 16
  2. உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே. - தொல்காப்பியம் அகத்திணையியல் 15
  3. திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே
    நிலன் ஒருங்கு மயங்குதல் இல என மொழிப
    புலன் நன்கு உணர்ந்த புலமையோரே. - தொல்காப்பியம் அகத்திணையியல் 14
  4. எந் நில மருங்கின் பூவும் புள்ளும்
    அந் நிலம் பொழுதொடு வாரா ஆயினும்
    வந்த நிலத்தின் பயத்த ஆகும். - தொல்காப்பியம் அகத்திணையியல் 21
  5. விரவும் பொருளும் விரவும் என்ப. - தொல்காப்பியம் அகத்திணையியல் 48
"https://ta.wikipedia.org/w/index.php?title=திணை_கொள்_நெறி&oldid=1562271" இலிருந்து மீள்விக்கப்பட்டது