திரிபு (இலக்கணம்)
தமிழில் சொல்லோடு சொல் இணையும் புணர்ச்சியில் சொற்களில் மாற்றம் உண்டாவதைத் திரிபு என வழங்குவர். இந்த மாற்றங்களைத் தொல்காப்பியம் மெய் பிறிதாதல், மிகுதல், குன்றல் என மூவகையாகப் பாகுபாடு செய்துகொள்கிறது. [1] நன்னூல் திரிதலை விகாரம் எனக் குறிப்பிடுகிறது. இதன் பாகுபாடுகளைத் தோன்றல், திரிதல், கெடுதல் எனக் குறிப்பிடுகிறது. [2]
- மிகுதல் (தோன்றல்)
- நிலாச்சோறு, பலாப்பழம்
- திரிபு - குன்றல் (கெடுதல்)
- மர(ம்) வேர்
- மெய் பிறிதாதல் - திரிதல்
- பால் சோறு = பாற்சோறு (நிலைமொழியில் திரிபு)
- கண் நன்று = கண்ணன்று (வருமொழியில் திரிபு)
- கள் நன்று = கண்ணன்று (இருமொழியிலும் நிரிபு