திரிபு (இலக்கணம்)

தமிழில் சொல்லோடு சொல் இணையும் புணர்ச்சியில் சொற்களில் மாற்றம் உண்டாவதைத் திரிபு என வழங்குவர். இந்த மாற்றங்களைத் தொல்காப்பியம் மெய் பிறிதாதல், மிகுதல், குன்றல் என மூவகையாகப் பாகுபாடு செய்துகொள்கிறது. [1] நன்னூல் திரிதலை விகாரம் எனக் குறிப்பிடுகிறது. இதன் பாகுபாடுகளைத் தோன்றல், திரிதல், கெடுதல் எனக் குறிப்பிடுகிறது. [2]

  • மிகுதல் (தோன்றல்)
    • நிலாச்சோறு, பலாப்பழம்
  • திரிபு - குன்றல் (கெடுதல்)
    • மர(ம்) வேர்
  • மெய் பிறிதாதல் - திரிதல்
    • பால் சோறு = பாற்சோறு (நிலைமொழியில் திரிபு)
    • கண் நன்று = கண்ணன்று (வருமொழியில் திரிபு)
    • கள் நன்று = கண்ணன்று (இருமொழியிலும் நிரிபு

அடிக்குறிப்பு தொகு

  1. அவைதாம்,
    மெய் பிறிது ஆதல் மிகுதல் குன்றல் என்று
    இவ் என மொழிப திரியும் ஆறே. (தொல்காப்பியம் புணரியல் 7)
  2. தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
    மூன்று மொழிமூ விடத்து மாகும். (நன்னூல் 154)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபு_(இலக்கணம்)&oldid=1257900" இலிருந்து மீள்விக்கப்பட்டது