திருத்துலைவில்லி மங்கலம்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருத்துலைவில்லி மங்கலம் (திருத்தொலைவில்லிமங்களம், இரட்டை திருப்பதி)108 வைணவத் திருத்தலத்தில் ஒரு திவ்ய தேசம். இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசத் திருத்தலமாகக் கருதப்படுகின்றது. எனினும் நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களையும் தனித்தனியே பெயரிட்டுள்ளதால் நவதிருப்பதிகள் கணக்கில் இரண்டு திருத்தலங்களாகக் கொள்வது மரபு.[1] தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருத்துலைவில்லி மங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (தெற்கு கோயில், ராகு அம்சம்)
புவியியல் ஆள்கூற்று:8°36′34″N 77°58′22″E / 8.609345°N 77.972860°E / 8.609345; 77.972860
பெயர்
புராண பெயர்(கள்):திருத்துலைவில்லி மங்கலம்
பெயர்:திருத்துலைவில்லி மங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (தெற்கு கோயில், ராகு அம்சம்)
அமைவிடம்
ஊர்:திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)
மாவட்டம்:தூத்துக்குடி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தேவப்பிரான்
தாயார்:உபயநாச்சியார்கள்
தீர்த்தம்:தாமிரபரணி, வருணதீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:நம்மாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:குமுத விமானம்
கல்வெட்டுகள்:உண்டு
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருத்துலைவில்லி மங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (தெற்கு கோயில், ராகு அம்சம்)
பெயர்
புராண பெயர்(கள்):திருத்துலைவில்லி மங்கலம்
பெயர்:திருத்துலைவில்லி மங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (தெற்கு கோயில், ராகு அம்சம்)
அமைவிடம்
ஊர்:திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)
மாவட்டம்:தூத்துக்குடி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஸ்ரீஅரவிந்த லோசனன் (செந்தாமரைக் கண்ணன்)
தாயார்:கருந்தடக்கண்ணி நாச்சியார்
தீர்த்தம்:அஸ்வினி தீர்த்தம் (அசுவினி தேவர்கள் நீராடிய தீர்த்தம்)
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:நம்மாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:குமுத விமானம்
கல்வெட்டுகள்:உண்டு

திருத்துலைவில்லி மங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் தொகு

ஆத்ரேயசுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுத போது ஒளிரும் வில்லையும் தராசையும் கண்டு ஆச்சரியமடைந்து கையில் எடுக்க, அவை சாப விமோசனம் பெற்று ஆண், பெண்ணாக உருப்பெற்றன. குபேரனை மதிக்காததால் சாபம் பெற்றதாகக் கூறினர். இதனாலேயே இவ்வூர் துலை, வில்லி மங்கலம் எனும் பெயர் பெற்றது.

பின்னர் யாகம் நடத்தி அவிர்பாகத்தை தேவர்களுக்குத் தந்த சுப்ரரும், பெற்ற தேவர்களும் திருமாலைத் தொழுது வழிபட திருமால் காட்சியளித்தார். தேவப்பிரான் எனும் திருப்பெயரும் பெற்றார்.

இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் தெற்கு திருக்கோயில் ராகு அம்சம் திருக்கோயில்.

திருத்துலைவில்லி அரவிந்தலோசனன் திருக்கோயில் தொகு

தினந்தோறும் தேவர்பிரானுக்கு தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தார் சுப்ரரர். இத்தகைய அழகு வாய்ந்த மலர்களை சுப்ரரர் எங்கிருந்து கொணர்கிறார் என்றறிய பெருமாள், சுப்ரரர் தாமரை மலர்களை தடாகத்தில் இருந்து எடுக்கவரும் போது பின்தொடர்ந்து வரவே, சுப்ரரர் காரணம் வினவினார். செந்தாமரை மலர்கள் கொண்டு செய்த வழிபாட்டில் மயங்கி வந்ததாகவும் அங்கேயே தமக்கு ஓர் ஆலயம் எழுப்பவும் கூறினார் பெருமாள்.

இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் வடக்கு திருக்கோயில்.கேது அம்சம் திருக்கோயில்.

குறிப்பு தொகு

நவதிருப்பதியில் அரசு போக்குவரத்துவசதி குறைவாக உள்ள திருத்தலம்.நடைமுறைப் பெயர் இரட்டைத் திருப்பதி என்பதே.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு