திருநெல்வேலி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
திருநெல்வேலி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [கு 1] [1]
அமைவிடம் தொகு
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகரில் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி பூந்துறை என்றும் சிந்து பூந்துறை என்றும் அழைக்கப்படுகிறது. அப்பகுதியில் இக்கோயில் உள்ளது. [1]
இறைவன், இறைவி தொகு
இக்கோயிலில் உள்ள இறைவன் சுந்தரேசுவரர் ஆவார். இறைவி மீனாட்சி ஆவார். [1]
பிற சன்னதிகள் தொகு
இச்சிறிய கோயிலின் வெளிச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், நடராச சபை சன்னதிகள் உள்ளன. மூலவருக்குப் பக்கத்தில் இறைவி சன்னதி உள்ளது. [1]
குறிப்புகள் தொகு
- ↑ குமரகுருபரன் 1972 பிப்ரவரி இதழில் இத்தலம் வைப்புத்தலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.