தி. பால் (பிறப்பு: மே 9 1932) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'திருகு' எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஓய்வு பெற்ற தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1955 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள் தொகு

  • "பேய்களின் திருவிளையாடல்கள்" (சிறுகதைகள் - 1989);
  • "ஒரு பயணத்தில் சில தப்புகள்" (கதம்பம் - 1994)

உசாத்துணை தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._பால்&oldid=3215999" இலிருந்து மீள்விக்கப்பட்டது