தீவகக் கல்வி வலயம்

தீவகக் கல்வி வலயம் (Islands educational zone) இலங்கை கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் கல்வி வலயங்களில் ஒன்றாகும். இது இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள 12 கல்வி வலயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.[1] இக்கல்வி வலயம் தனக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளைப் பரிபாலித்தல், நிர்வகித்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பரீட்சைகள் நடாத்துதல், ஆசிரியர், அதிபர்களை நியமித்தல் போன்ற செயற்பாடுகளையும் இக்கல்வி வலயமே மேற்கொண்டு வருகின்றது. இக்கல்வி வலயத்தில் வேலணசி, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு என மூன்று கோட்டங்கள் உள்ளன.[2] இதன் தற்போதைய பணிப்பாளர் திரு. எஸ். சுந்தரசிவம் ஆவார்..[3] இதன் தலைமக் காரியாலயம் வேலணையில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "It works under the Ministry of Education, Sri Lanka". Archived from the original on 21 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 December 2016.
  2. "Map of zone". பார்க்கப்பட்ட நாள் 8 December 2016.
  3. "வலயக் கல்விப் பணிப்பாளர்". பார்க்கப்பட்ட நாள் 8 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீவகக்_கல்வி_வலயம்&oldid=3558681" இலிருந்து மீள்விக்கப்பட்டது