தேசிய கைவினைப் பொருட்கள் விருது

தேசிய கைவினைப்பொருட்கள் விருது (National Handicrafts Award) என்பது கைவினைப்பொருட்களின் மேம்பாட்டிற்கான சிறப்பான பங்களிப்பை அளிப்பவர்களின் திறனை அங்கீகரிப்பதற்காக திறமை வாய்ந்த கைவினை கலைஞர்களுக்கு இந்திய அரசு வழங்கும் ஒரு விருது ஆகும். இந்த விருதின் முக்கிய நோக்கம் கைவினைத் துறையில் சிறந்த கைவினை கலைஞர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாகும்.இந்த விருது இந்தியாவின் கைவினைக் கலைஞர்களுக்கான மிக உயர்ந்த விருது ஆகும்.[1] [2] [3]

இந்த விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்குகிறார். சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு ஷில்ப் குரு (Shilp Guru)விருதும், சிறந்த நெசவாளர்களுக்கு சான்ட் கபீர் விருதும் (Sant Kabir) வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் 1965 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[4]

குறிப்புகள் தொகு

  1. "President of India to present Shilp Guru Awards and National Awards for Master Craftspersons at Rashtrapati Bhavan Cultural Centre tomorrow".
  2. "Shilp Guru Award, National Award & National Merit Certificate for Outstanding Contribution in Handicrafts Sector" (in ஆங்கிலம்). Archived from the original on 2019-10-18. பார்க்கப்பட்ட நாள் 2019-08-01.
  3. "Awards Schemes for Handicrafts Artisans 2017" (PDF) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-01.
  4. "President of India presents Shilp Guru and National Awards to Master Craftspersons".

வெளி இணைப்புகள் தொகு