நந்தினி சுந்தர்

நந்தினி சுந்தர் (Nandini Sunda; பிறப்பு 1967) தில்லி பொருளாதாரப்பள்ளியில் இந்திய சமூகவியல் பேராசிரியர் ஆவார்.[1] இவரது ஆராய்ச்சி ஆர்வங்களில் அரசியல் சமூகவியல், சட்டம் மற்றும் சமத்துவமின்மை ஆகியவை அடங்கும். இவர் 2010 இல் சமூக அறிவியலுக்கான இன்போசிஸ் பரிசைப் பெற்றார்.[2] 2016 ஆம் ஆண்டில் வளர்ச்சி ஆராய்ச்சிக்கான எஸ்டர் போஸ்ரப் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது.[3] 2017இல் மேம்பாட்டு ஆய்வுகளில் சிறப்பான பங்களிப்புகளுக்கான மால்கம் ஆதிசேசையா விருது வழங்கப்பட்டது.

கல்வி தொகு

இவர், 1989 ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டின் சோமர்வில்லே கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1991இல் மானுடவியலில் முதுகலையையும், 1991இல் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[2] இவர் முன்பு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், பொருளாதார வளர்ச்சி நிறுவனம் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியுள்ளார். 2007 முதல் 2011 வரை இந்திய சமூகவியலுக்கான பங்களிப்புகளின் ஆசிரியராக இருந்தார். மேலும், பல பத்திரிகைகளிலும் பணியாற்றுகிறார். 

மனித உரிமைப் பணிகள் மற்றும் சர்ச்சைகள் தொகு

இவர் மற்றவர்களுடன் சேர்ந்து 2007 இல், சால்வா ஜூடும் விழிப்புணர்வு இயக்கத்தில் இருந்து எழுந்த சத்தீஸ்கரில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பொது நல வழக்குகள் தாக்கல் செய்தார். 2011ஆம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றம் சால்வா ஜுடுமை தடைசெய்தது, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கவும், பொறுப்பானவர்கள் மீது விசாரணை மற்றும் வழக்குத் தொடரவும் உத்தரவிட்டது. சிறப்பு காவல் அதிகாரிகளை கலைத்தும் உத்தரவிட்டது. அவர்களில் பலர் நக்சலைட்டுகளுக்கு எதிராக போராட அரசால் ஆயுதம் ஏந்திய வயது குறைந்த இளைஞர்கள்.[4]

அக்டோபர் 2016 இல், இவரால் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மத்திய புலனாய்வுப் பிரிவு, சுக்மா மாவட்டத்தில் மூன்று கிராமங்களை எரித்ததில் ஏழு சிறப்பு காவல் அதிகாரிகள் மற்றும் 26 சல்வா ஜூடும் தலைவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மார்ச் 2011 மற்றும் சுவாமி அக்னிவேஷ் மீதான தாக்குதல். கிராமவாசிகளின் கற்பழிப்பு மற்றும் கொலைகளுடன் இந்த தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ref>"Security forces burnt 160 homes in Chhattisgarh village in March 2011: CBI". Indianexpress.com. 22 October 2016. பார்க்கப்பட்ட நாள் 11 November 2018.</ref>

கிட்டத்தட்ட உடனடியாக, இவரது மற்றும் பிற ஆர்வலர்களின் உருவ பொம்மைகளை காவல்துறையினர் எரித்தனர். மேலும் பஸ்தர் மாவட்டக் காவல்துறை 4 நவம்பர் 2016 அன்று சுக்மா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவரான சாம்நாத் பாகேலின் கொலையில் இணை சதிகாரர் என்று கூறி முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது. [5] பாதிக்கப்பட்டவரின் மனைவி தேசிய தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவிக்கு, தான் யாரையும் குறிப்பிடவில்லை என்று கூறினார்.[6]

பணிகள் தொகு

இவர் நீண்ட காலமாக கல்வி சுதந்திரம் பற்றி வெளிப்படையாக பேசினார். 2019 ஆம் ஆண்டில், டைம்ஸ் உயர் கல்வி நிறுவனத்திடம், காஷ்மீரில் மின்தடை ஒரு "பேரழிவு தரும் அடி" என்றும், 2014இல் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் நிலைமை மோசமடைந்துள்ளது என்றும், சுதந்திரம் இல்லாதது பல்கலைக்கழக தரவரிசையில் ஏறும் இந்தியாவின் முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறினார்.[7]

2020 கோடையில், இவர் கல்விச் சுதந்திரம் பற்றிய ஒரு ஆய்வறிக்கையை [[ஐக்கிய நாடுகள் அவை|ஐக்கிய நாடுகள் அவைக்குச் சமர்ப்பித்தார்.[8]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

நந்தினி, இந்திய ஆங்கில மொழி தேசிய செய்தித்தாளான தி இந்துவின் முன்னாள் தலைமை ஆசிரியரும், தி வயர் இதழின் நிறுவன ஆசிரியருமான சித்தார்த் வரதராஜனை மணந்தார்.</nowiki> [9] இவரது பெற்றோர், எஸ். சுந்தர் மற்றும் புஷ்பா சுந்தர் இருவரும் 1963 தொகுதியைச் சேர்ந்த குஜராத் பிரிவின் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் ஆவர். இவருக்கு அபர்ணா என்ற ஒரு மூத்த சகோதரி உள்ளார். அவர் ஒரு சமூக ஆர்வலரும் கூட.

மேற்கோள்கள் தொகு

  1. [1]
  2. 2.0 2.1 "Infosys Prize - Laureates 2010 - Prof. Nandini Sundar". Infosys-science-foundation.com. பார்க்கப்பட்ட நாள் 11 November 2018.
  3. "Award of the Ester Boserup Prize 2016: Professor Nandini Sundar". Cgsas.tors.ku.dk. 5 April 2016. Archived from the original on 15 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 11 November 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Nandini Sundar & Ors vs State Of Chattisgarh on 5 July, 2011". Indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 11 November 2018.
  5. "DU professor Nandini Sundar booked for tribal man's murder". Thehindu.com. 8 November 2016. பார்க்கப்பட்ட நாள் 11 November 2018.
  6. "Never Named Anyone, Says Wife Of Murdered Tribal On Professor Nandini Sundar". Ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 11 November 2018.
  7. Lau, Joyce (Oct 9, 2019). "Academic freedom curbs hamper India's eminence hopes". Times Higher Education (in ஆங்கிலம்).
  8. Lau, Joyce (Aug 19, 2020). "Academic freedom in India squeezed by shift to insecure contracts". Times Higher Education (in ஆங்கிலம்).
  9. "Editors Guild criticises U.P. govt.". https://www.thehindu.com/news/national/editors-guild-criticises-up-govt/article31322888.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தினி_சுந்தர்&oldid=3632852" இலிருந்து மீள்விக்கப்பட்டது