நம்மாண்ட அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

நம்மாண்ட அள்ளி அல்லது நமாண்டபட்டி (Namandahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643194.[1] இந்த ஊரானது கும்மனூர் ஊராட்சிக்கு உட்பட்டது.

நம்மாண்ட அள்ளி
நம்மாண்டஹள்ளி

நம்மாண்டபட்டி
நம்மாண்டள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635116

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 925, மொத்த மக்கள் தொகைகள் 3,960 ஆகும். இதில் 2,059 ஆண்களும் 1,901 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள் தொகு

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Namandahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்மாண்ட_அள்ளி&oldid=3611945" இலிருந்து மீள்விக்கப்பட்டது