நான் புடிச்ச மாப்பிள்ளை

வி. சேகர் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நான் புடிச்ச மாப்பிள்ளை என்பது 1991 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.

நான் புடிச்ச மாப்பிள்ளை
இயக்கம்வி. சேகர்
தயாரிப்புகே. பார்த்திபன்
ஆர். கே. சேது
ஏ. ராஜேந்திரன்
கதைவி. சேகர்
இசைசந்திரபோஸ்
நடிப்புநிழல்கள் ரவி
ஜனகராஜ்
சரண்யா
ஐஸ்வர்யா
ஒளிப்பதிவுஜி. ராஜேந்திரன்
படத்தொகுப்புஏ. பி. மணிவண்ணன்
வெளியீடு21 பிப்ரவரி 1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை தொகு

குடும்பப்படம்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கிராமத்து தலைவராக இருக்கு கதாநாயகன் , அவரது பதவியை அவரின் பெயரை கெடுக்கும் வகையில் நடக்கும் அவரது அக்கா கணவர், அக்கா மகன் ஆகியோரைச் சுற்றி பின்னப்பட்ட இயல்பான கிராமத்து கதை. பண்புடன் இருக்கும் தரகரை மதிக்கும் கதாநாயகன் அவரது மகளை மணக்கிறான். இதனால் தனது தாய் உட்பட அனைவரின் வெறுப்புக்கும் உள்ளாகிறான். விரும்பி மணந்த தரகரின் மகள் எதிர்பாராமல் இறந்து விட மறுபடியும் மணம் புரிய அவனது மாமனார் கட்டயப்படுத்துகிறார். அவரின் வற்புறுத்தலுக்காக அக்கா மகளையே மணமுடிக்கிறான். உறவுகள் மீண்டும் சேர்கின்றன ஆனால் அவரது மாமனாரைக் குற்றம் சாட்டி பிரித்து விடுகிறார்கள். உண்மையை உணர்ந்து கதாநாயகன் தேடிச் செல்லும் முன் உயிர் துறக்கிறார் அந்த பாசமுள்ள மாமனார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_புடிச்ச_மாப்பிள்ளை&oldid=3710290" இலிருந்து மீள்விக்கப்பட்டது